அக்ஷராவிடம் பாவனி தோற்றத்தை விமர்சித்துள்ள தாமரை – வைரலாகும் வீடியோவால் கடுப்பான பாவனி ஆர்மி.

0
776
thamarai
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 76 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இடையே இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து 9 பேர் வெளியே இருக்கும் நிலையில் 12 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வருகிறார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர். அதில் தாமரை செல்வியும் ஒருவர்.

-விளம்பரம்-

தாமரையின் மாற்றங்கள் :

ஆரம்பத்தில் இருந்த தாமரையை பலரும் வெகுளி என்று தான் நினைத்தனர். ஆனால், தற்போது இருக்கும் நிலையில் மிகவும் சிறப்பான கேம் விளையாடுவது யார் என்றால் அது தாமரை தான். இதுவரை பிக் பாஸ் வீட்டில் அதிக சண்டை போட்டது யார் என்றால் அது தாமரையாக தான் இருக்கும். முதல் வாரத்தில் வெளியேறிய நமீதா துவங்கி இசைவானி வரை பலரிடமும் சண்டையிட்டு இருக்கிறார் தாமரை.

- Advertisement -

ஸ்ருதியால் சிக்கிய தாமரை :

தாமரையிடமிருந்து ஸ்ருதி நாணயத்தை எடுத்ததிலிருந்து தாமரைக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஆரம்பித்து விட்டது. இந்த விவகாரத்தின் போது சுருதிக்கு ஆதரவாக பாவனி பேசியதால் தாமரை செல்வி அவர் மீது கோபம் கொண்டார். இதனால் அப்போது இருந்து பாவனியை தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி இருந்தார். இந்த விவகாரத்தில் இருந்தே தாமரையின் உண்மையான முகம் அவ்வப்போது வந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து சோசியல் மீடியாவில் ரசிகர்களும் கருத்துகளை பதிவிட்டு வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் தாமரை ஆரம்பத்தில் சிம்பதி கிரியேட் பண்ணி மற்றவர்களை தன் பக்கம் இழுத்தார் என்றும், இப்போது அவருடைய சுயரூபம் வெளியே வந்தது என்றும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் இல்லாமல் வெளியே பார்க்கும் நமக்கும் தெரியவந்தது.

-விளம்பரம்-
https://twitter.com/_Neelambari/status/1471917160419106817

பாவனியும் பாயாசமும் :

அதிலும் கடந்த சில வாரமாக பாவனியிடம் இவர் நடந்துகொள்ளும் விதம் பலரும் முகம் சுழிக்க வைத்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனைவருக்கும் பாயசம் ஊற்றி கொடுத்த தாமரை, பாவனிக்கு மட்டும் கொடுக்காமல் இருந்தது பலரை கடுப்பாகியது. இது குறித்து கமலும் தாமரையிடம் கேட்டார். இப்படி ஒரு நிலையில் பாவனியின் அழகு பற்றி தாமரை பேசிய வீடியோ பாவனி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அவ்ளோ பெரிய பேரழகியா :

கடந்த சில வாரமாகவே பாவனி – அபிநய் விவகாரம் தான் மிகவும் பேசுபொருநாளது. ஆனால், இந்த விவகாரத்தில் கமல் பஞ்சாயத்து செய்ததில் இருந்து இருவரும் பேசுவது இல்லை. இருப்பினும் தற்போது பாவனியிடம் அமீர் ரொமான்ஸ் செய்து வருகிறார். இந்த நிலையில் பாவனி என்ன ‘அவ்ளோ பெரிய பேரழகியா’ என்று தாமரை பேசியுள்ள வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement