அம்மாவிற்கு ஏற்பட்ட சோகம் – பிக் பாஸில் கலந்து கொள்ள முடியாததற்கு காரணம் இது தானா. அஸீம் விளக்கம்.

0
1684
azeem
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 57 நாட்களை கடந்து விட்டது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்கரவர்த்தி சுசித்ரா சம்யுக்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது. ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-
அம்மாவுடன் அஸீம்

ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார். அதே போல இரண்டாம் வைல்டு கார்டு போட்டியாளரான சுசித்ரா ஏற்கனவே சுச்சி லீக்ஸ் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதே போல சமூக வலைத்தளத்தில் இவர் தைரியமாக பல சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் விமர்சித்து இருக்கிறார்.எனவே, இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது கண்டிப்பாக நிகழ்ச்சியில் எதாவது ஒரு சுவாரசியத்தை கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், இவர் உள்ளே நுழைந்தது முதல் பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் வரை இந்த வாரம் ரசிகர்கள் வழியனுப்பி வைத்துவிட்டார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் 4 சீஸனின் மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற சீரியல்களில் சிவாணிக்கு ஜோடியாக நடித்த அஸீம் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைய இருக்கிறார் என்று பல வாரமாக செய்திகள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல அசீமும் கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து சூசகமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை போட்டு வந்தார். அதே போல  சென்னை கிண்டியில் இருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டும் இருந்தார்.

கடந்த வாரம் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைவதாக இருந்தது. ஆனால், நடிகர் அசீம் திடீரென்று வெளியேறியதாகவும், சென்னை அண்ணா நகர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிலர் பார்த்ததாகவும் தகவல்கள் கசிந்தன.இது குறித்து விசாரிக்கையில் அவரது அம்மாவிற்கு அவசர மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள பட்டதால் அசினின் தந்தை அவரது அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் அவர் ஹோட்டலில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-46.jpg

அதில், தனது அம்மாவிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார், கடவுள் புண்ணியத்திலும், உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளால் அவர் குணமடைந்து வருகிறார். விரைவில் அவர் முழுமையாக நம்ளபெறுவார் என்று கூறியுள்ளார்.

Advertisement