பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. ஆனால் ,இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு கடுமையானடாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற போகும் நிலையில் யார் வெற்றி பெறப் போவது என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் போட்டியாளர்களுக்கு சவாலான டாஸ்க்கும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே அதாவது இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டாஸ்க் நடைபெற இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் பாருங்க ; முதன் முறையாக பிகினி போன்ற ஆடையில் போஸ் கொடுத்த யாஷிகா.! வாயை பிளக்கும் ரசிகர்கள்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் சினேகன் இந்த டாஸ்கில் வெற்றி பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். அதே போல கடந்த ஆண்டு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஜனனி வெற்றி பெற்று நேரடியாக ஈர்த்து போட்டிக்கு சென்றார். இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் பிரபலம் ஒருவர் நுழைந்து டிக்கட் டு பினாலேவிற்கான டாஸ்கை போட்டியாளர்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறார்.
இந்த பகுதி நாளைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதுவரை பெரிதாக டாஸ்கை கண்டிராத போட்டியாளர்களுக்கு இந்த டிக்கட் டு பினாலேவிற்கான டாஸ்க் மிகவும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த டாஸ்கில் யார் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.