ஆண்களுடன் சேர்ந்து தம் அடித்த அபிராமி – முதல் நாளே எழுந்த சர்ச்சை. வைரலாகும் வீடியோ இதோ.

0
968
Abhirami
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக துவங்கியது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், தமிழில் ஐந்து வருடங்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக நிறைவடைந்தது. இதில் முதல் இடத்தை ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து ரசிகர்கள் சோகத்தில் இருந்த சமயத்தில் தான் ஒரு புது வித பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி அறிமுகப்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-

அது தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு. மேலும், இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று முதல் நாள் என்பதால் மட்டும் டிவயில் ஒளிபரப்பப்பட்டது.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள்:

இதில் முதல் நாளே வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர்.ஆனால், பிக் பாஸ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓவியா நேற்றய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி செய்த செயல் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. இதுவரையில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பல விஷயங்களை எடிட் செய்து ஒரு முக்கியமான செயல்களை மட்டும் காட்டி இருந்தார்கள். இதனால் இந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. ஆனால், தற்போது ஒளிபரப்பாகி வரும் அல்டிமேட் நிகழ்ச்சியில் உள்ளே நடப்பதை அப்படியே ரசிகர்கள் பார்த்துக்கொள்ள முடியும். அப்படி ஒரு நிகழ்வுகளில் முக்கியமான நிகழ்வு தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் புகைபிடிக்கும் வீடியோ.

-விளம்பரம்-

முதல் நாளே வைரலாகும் புகைப்பிடிக்கும் வீடியோ:

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டுக்குள் புகை பிடிக்கக்கூடாது என்ற ஒரு அறை இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், எதற்காக அந்த அறை என்று தெரியாமல் தான் இத்தனை சீசன்கள் ஆக இருந்தது. தற்போது அந்த அறைக்குள் நடந்த செயல்கள் பார்த்ததும் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தார்கள். அந்த வீடியோவில் நிரூப், அபிநய், ஷாரிக் மற்றும் அவர்களுக்கு பின்புறமாக கண்ணாடியில் ஒரு பெண் போட்டியாளர் தெரிகின்றார். அவர் வேறு யாரும் இல்லை, பரதநாட்டிய நடிகை அபிராமி தான். இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து புகை பிடிக்கும் அறையில் நின்று புகை பிடித்து இருக்கிறார்கள். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது.

அபிராமி புகைபிடிக்கும் காட்சியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியாகி இப்படி எல்லாம் செய்கிறார்களா? என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு திட்டி சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர். மேலும், அபிராமி செய்த காரியத்தை குறித்து பலரும் விமர்சித்து கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிராமி – முகென் காதல் குறித்து பல சர்ச்சைகளும் வதந்திகளும் கிளம்பி இருந்தது அனைவருக்கும் தெரிந்தது. அதற்கு பின்பு நிரூப்புக்கும் அபிராமிக்கும் இடையே காதல் கிசுகிசு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் அபிராமி நிருப்புடன் சேர்ந்து புகைப்பிடிக்கும் காட்சி சோஷியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இப்படித்தான் ஒவ்வொரு சீசனிலும் நடந்து கொண்டிருக்கிறதா? இதையெல்லாம் நம்மிடம் காட்டாமல் தான் இருந்தார்களா? என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

Advertisement