அல்டிமேட்டுக்கு முன் பெண்களை குறிப்பிட்டு போட்ட இன்ஸ்டாகிராம் Bio, வெளியேறியதும் மாற்றிய அனிதா – பாவம், என்ன நெனச்சாங்களோ.

0
651
anitha
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி ஏழு வாரத்தை கடந்து உள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய்,தாடி பாலாஜி வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த வாரம் சினேகன் வெளியேறினார். நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் வெளியேறியதை தொடர்ந்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் அனிதா, சுருதி, நிரூப், தாமரை, ஜூலி,சதீஷ் ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் சமூக வலைதளத்தில் பல ஹேட்டர்ஸ்களை சம்பாதித்த ஜூலி இந்த சீசனில் நல்ல பெயரை எடுத்து வருவதால் கடந்த இந்த வாரம் பல வலைதளத்தில் நடத்தட்ட வாக்கெடுப்பில் முதல் இடத்தில் இருந்துவந்தார்.

- Advertisement -

வெளியேறிய அனிதா :

ஜூலியை தொடர்ந்து தொடர்ந்து தாமரை மற்றும் நிரூப் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருந்து வந்தனர். எனவேய, சதீஷ், அனிதா, சுருதி ஆகிய மூவரில் யாரவது வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் சதிஷ் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் அனிதா வெளியேறி இருந்தார். உண்மையில் இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த அனிதா இன்ஸ்டாகிராமில் Bioவை மாற்றி இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் Bioவை மாற்றிய அனிதா :

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு செல்வதற்க்கு முன்பாக தனது இன்ஸ்டகிராம் bioவில் ‘பெருங்கனவுகளை சுமந்து முன்னேறும் சாமானிய பெண்களின் பிரதிநிதியாக BB Ultimate-ல் என்று பதிவிட்டு இருந்தார்.’ என்று குறிப்பிட்டு இருந்தார் அனிதா. ஆனால், பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ‘உங்களுக்காக நீங்கள் தான் நிற்க வேண்டும், வேறு யாரும் நிற்க மாட்டார்கள் என்று குறியிட்டு இருக்கிறார்.‘ என்று கூறிப்பிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

அனிதா சீசன் 4:

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அனிதாவின் பெயர் தான் தொடர்ந்து டேமேஜ் ஆகிவந்தது . 4ஆம் சீசனில் பெண்கள் சுதந்திரத்தை பற்றி எல்லாம் பேசி கைதட்டல் வாங்கினார் அனிதா. அதே பாணியை இந்த சீசனிலும் கடைபிடித்து வந்தாலும் அது அவருக்கே வினையாக முடிந்துவிட்டது. தான் விளையாடுவதை விட்டுவிட்டு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று தான் அனிதா அதிகம் யோசித்து கொண்டு வந்தார்.

அனிதாவிடம் இருந்த மாற்றம் :

அதே போல 4ஆம் சீசனில் இவர் சுமங்கலி பஞ்சாயத்து குறித்து பேசி காமலிடமே கைதட்டலை வாங்கினார். ஆனால், இந்த சீசனில் இருந்த அனிதாவே வேறு. இந்த சீசனில் அனிதா பல முறை டபுள் மீனிங்கில் பேசி சர்ச்சையில் சிக்கிவந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட பிக் பாஸின் குழந்தை என் வயிற்றில் வளருகிறது என்று பேசி பலரை முகம் சுளிக்க வைத்தார். அனிதாவின் நடவடிக்கைகளை பார்த்த ரசிகர்கள் பலர் இவரா? இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement