வனிதாவையே அழ கதற கதற அழவைத்த போட்டியாளர் – கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல போல.

0
534
vanitha
- Advertisement -

தமிழில் புது வித்தியாசமான கதைக்களத்துடன் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இரண்டு வாரத்தை கடந்து உள்ளது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். மேலும், கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

பின் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி புகை பிடிக்கும் வீடியோ, வனிதாவின் குழாய் அடி சண்டை, நிரூப் முன்னாள் காதல், அனிதா-தாமரை-ஜூலி செய்யும் சேட்டைகள் என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதோடு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி விட்டது. இதனால் பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகிறார்கள். கடந்த வாரம் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே நாமினேட் செய்யப்பட்டு இருந்தார்கள். அதில் முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார்.

- Advertisement -

இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷன்:

அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷனும் நடந்து முடிந்து 6 பேர் வெளியேற்றுவதற்கான பட்டியலில் இருந்தார்கள். அதே போல இந்த வாரம் Trending Player Of The Week பெட்ரா வனிதாவும் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்தார். அதுவும் இந்த முறை நேரடி நாமிநேஷன் நடத்தி இருந்தார்கள். பின் இரண்டாவது வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி வெளியேறி இருக்கிறார். மேலும், சுஜா வருணி தான் அடுத்த வார கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் கூட சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறும் முன் தான் கேப்டனாக பொறுப்பேற்றார்.

வனிதாவின் அழுகை வீடியோ:

ஆனால், கேப்டனான அடுத்த நாளே அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார். அவர் வெளியேறும் முன் தன்னுடைய கேப்டன் பதவியை சினேகனுக்கு கொடுத்துவிட்டு சென்றார். பின் சுஜா தன்னுடைய கேப்டன் பதவியை யாருக்கு கொடுத்துவிட்டு செல்லப்போகிறார்? என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்றைக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் வனிதா தேம்பி தேம்பி அழுகிறார். பொதுவாகவே வனிதாவின் விளையாட்டை பலரும் எதிர்பார்த்து தான் அல்டிமேட் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள் என்று சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடும்போது பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் வனிதா:

அது மட்டும் இல்லாமல் வனிதாவை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அவர் எது பேசினாலும் அவரிடம் போட்டி போட முடியாமல் பலரும் விலகிச் செல்வார்கள். ஆனால், இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதாவை எதிர்த்து ஷாரிக் பலமுறை சண்டை போட்டிருக்கிறார் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை வனிதாவுக்கும் ஷாரிக்கும் இடையே நிறைய மோதல்கள் ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த வாரத்திற்கான கேப்டனுக்கான போட்டி நெற்றிக்கண் என்ற தலைப்பில் வைத்தார்கள். அதில் சுருதி மற்றும் வனிதா ஆகியோர் விளையாடினார்கள். அப்போது வனிதா வெற்றி பெற்றார். ஆனால், வீட்டில் உள்ள உங்களுடைய கண் நன்றாக தெரிந்தது.

வனிதா-ஷாரிக் மோதல் ப்ரோமோ:

அதனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது மீண்டும் விளையாடுங்கள் என்று சொன்னார்கள். உடனே வனிதா கோபப்பட்டு நான் சரியாகத்தான் விளையாடினேன் என்று வீட்டில் உள்ள அனைவரிடமும் விவாதம் செய்கிறார். ஆனால், அதிகமாக வனிதாவுக்கும் ஷாரிக்கும்ம இடையே மோதல் அதிகமாகிறது. பின் வனிதா கன்பக்சன் ரூமிற்கு சென்று நான் என்ன தவறு செய்தேன். என்னை மட்டும் ஏன் எல்லோரும் தாக்குகிறார்கள் என்று பயங்கரமாக அழுகிறார். இப்படி வனித்தாவையே பதற வைத்த ஷாரிக்கின் ப்ரோமோ வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வழக்கம்போல் இந்த வாரத்திற்கான கேப்டன் யார்? உண்மையில் இந்த டாஸ்க்கில் யார் வெற்றி பெற்றது? வனிதாவின் அழுகைக்கு என்ன பதில் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement