பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறிய சுரேஷ் – தன் கேப்டன் பதவியை யாருக்கு கொடுத்துட்டு போய்யிருக்கார் பாருங்க.

0
494
suresh
- Advertisement -

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கு கேப்டனாக இருக்கும் நபரைப் பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. கடந்த ஐந்து வருடங்களாக தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஐந்து வருடமும் கமலஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்தது. இதில் முதலிடத்தை ராஜு, இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்து இருந்தார்கள். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டுமே என்ற கவலையில் ரசிகர்கள் இருந்த போது விஜய் டிவி புதிய கதைக்களத்துடன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை அறிவித்திருந்தது.

-விளம்பரம்-

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி போட்டியாளர்கள்:

மேலும், கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன், போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நடக்கும் கலவரம்:

முதல் நாளே அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி புகை பிடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதோடு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி விட்டது. இதனால் பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகிறார்கள். அதிலும் வனிதா ஒருத்தரை விட்டு வைக்கவில்லை புரட்டி எடுத்து வருகிறார். அதோடு அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் வனிதா, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், சுருதி, சினேகன், அனிதா, நிரூப் ஆகிய எட்டு பேர் வெளியேறுவதற்காக நாமினேஷன் பட்டியலில் இருந்தனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் எலிமினேட்:

இந்நிலையில் நிகழ்ச்சியில் இருந்து முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டவர். தற்போது அல்டிமேட்டில் கலந்த இவர் கடந்த ஒரு வாரத்தில் பெரிதாக நிகழ்ச்சியில் ஈடுபாடாக விளையாடவில்லை. அதுமட்டுமில்லாமல் நடந்து முடிந்த டாஸ்க்கில் கொளுத்திப் போடுபவர் என்ற பட்டம் இவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த வாரம் முழுவதும் வீட்டில் கேப்டனாக இருக்க நடந்த போட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தி தான் வெற்றி பெற்றார்.

bb

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அடுத்த கேப்டன்:

அதனால் இவர் வெளியேற மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், சுரேஷ் சக்ரவர்த்தி வீட்டை விட்டு செல்லும் போது தன்னுடைய கேப்டன் பதவியை சினேகனுக்கு கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். இதனால் அடுத்த வாரம் சினேகன் தான் கேப்டன். அதோடு அடுத்த வாரம் எவிக்ஷனில் சினேகன் வரமாட்டார் காப்பாற்றப்பட்டார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement