‘நீ வெளிய போய் என்ன கருமத்த வேனா பண்ணு, என் முன்னாடி பண்ணாத’ – தன் முன்னாள் காதலியிடம் எல்லை மீறிய பாலாஜியால் கடுப்பான நிரூப், வீடியோ இதோ.

0
512
niroop
- Advertisement -

தன் முன்னாள் காதலி அபிராமியிடம் இல்லை மீறிய பாலாஜி பற்றி புலம்பி தள்ளி இருக்கிறார் நிரூப். ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட்டில் தினமும் ஏதாவது ஒரு சர்ச்சை வெடித்துகொன்டு தான் தான் வருகிறது. அதே போல பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் காதல் கதை நிச்சயம் இருக்கும். ஆனால், இந்த சீசனில் சற்று வித்யாசமாக காதலில் பிரிந்த இரண்டு பேர் கலந்துகொண்டு இருக்கின்றனர். அது தான் அபிராமி – நிரூப். இந்த சீசனில் தான் இவர்கள் இருவரும் காதலித்து பிரிந்த கதையை சொன்னார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-19.jpg

இதில் நிரூப் ஏற்கனவே யாஷிகாவை காதலித்ததும் அது பிரேக் அப் ஆனது குறித்தும் கடந்த சீசனில் சொல்லி இருந்தார். அதே போல அபிராமியும் முகேனை ஒரு தலையாக காதலித்து தெரியும். மேலும், நிரூப் கடந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவரும் யாஷிகாவும் இருக்கும் புகைப்படங்கள் வைரலானது போலவே நிரூப் – அபிராமி புகைப்படங்களும் வைரலானது. இப்படி ஒரு நிலையில் தான் இவர்கள் இருவரும் காதலித்து பின்னர் பிரிந்துவிட்டதாக கூறி இருந்தனர்.

- Advertisement -

ஒரே வீட்டில் இருக்கும் முன்னாள் ஜோடிகள் :

பிரிந்த காதலர்கள் பிக் பாஸ் வீட்டில் ஒன்றாக இருப்பதால் இருவரும் மீண்டும் காதலில் விழுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அபிராமிக்கும் – பாலாஜிகும் ஒரு கெமிஸ்ட்ரி சென்று கொண்டு இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே பாலாஜி – அபிராமிகும் இடையே எதோ சென்று கொண்டு இருக்கிறது என்று போட்டியாளர்கள் முனு முனுக்க துவங்கி இருக்கும் நிலையில் பாலாஜியும் அபிராமி பின்னால் தான் சுற்றோக்கொண்டு வருகிறார்.

என்னதான் இனி நாங்கள் சேரப்போவது இல்லை என்று நிரூப் கூறிக்கொண்டு வந்தாலும் பாலாஜி, அபிராமி மீது காட்டும் பரிவை நிரூப்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் பாலாஜி, அபிராமியின் இடுப்பை கிள்ளியதாக வனிதாவிடம் சொல்லி புலம்பி இருக்கிறார் நிரூப். நேற்றைய நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய நிரூப், என் முன்னாடியே அபிராமி இடுப்பை கிள்றான். அவளும் எதுவும் சொல்லவில்லை.

-விளம்பரம்-

எல்லை மீறிய பாலாஜி :

அவனுக்கு எங்க ரெண்டு பேருக்கு என்ன நடந்ததுன்னு அவனுக்கு நல்லா தெரியும், நீ வெளிய போய் என்ன கருமத்த வேனா பண்ணு ஆனா, என் முன்னாடி பண்ணாத என்று நிரூப் புலம்பியயுடன், அவங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணி தான் பண்றாங்க, அத பத்தி நீ ஏன் கவலபடுற உன் வேலைய பாரு, எல்லாம் வேணும்னு தான் பண்றாங்க. இது இன்னிக்கின்னு இல்ல இங்க லவ்ன்ற விஷயத்த வேணும்னே பண்ணுவாங்க என்று கூறினார் வனிதா.

முதலில் பற்ற வைத்த வனிதா :

சொல்லப்போனால் பாலாஜி – அபிராமி குறித்து நிரூப்பிடம் பற்ற வைத்ததே வனிதா தான். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அபிராமி குறித்து நிரூப்பிடம் சொன்ன வனிதா ‘ அபிராமி உண்மையில் ஏமாளி என்று தான் சொல்லணும். யார் எது சொன்னாலும் எளிதாக நம்பி விடுகிறார். இதனால் அவளை வைத்து பல பேர் விளையாடுகிறார்கள். அதேபோல் நான் பாலாஜி பற்றியும் அபியிடம் சொல்லியிருந்தேன். ஆனால், அவள் புரிந்து கொள்ளவில்லை. ஏன்னா, நான் பாலாஜியிடம் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு பின் பேசும்போது, நீதான் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றாய். எதற்காக அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறாய்? என்று நான் கேட்டேன். அதற்கு பாலாஜி நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்.

அவளுக்காக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து பணம் சம்பாதிக்கணும் என்று வந்து இருக்கிறேன் என்று கூறினார். ஆனால் இங்கு வந்த பின் பாலாஜி இதை நீங்கள் வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் சொன்னார்.இப்படி இருக்கும்போது அபியிடம் எப்படி பாலாஜி இடம் நெருக்கமாக பழக முடிகிறது? இது பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? அபிராமி உன்னிடம் ஏதாவது சொல்லியிருக்கிறாரா? என்று நிரூப் இடம் வனிதா கேட்கிறார். அதற்கு நிரூப் கூறியது, அபிராமி பாலாஜியை காதலிக்கவில்லை. அவர்கள் நண்பர்களாகத்தான் பழகி இருக்கிறார்கள். இதை நான் அபிராமி இடமே நேரடியாக கேட்டேன். அபிராமியும் இல்லை என்றுதான் மறுத்தார் என்று கூறினார்.

Advertisement