அனிதாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய ரம்யா பாண்டியன், என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்களே- வைரலாகும் வீடியோ

0
632
newthumb
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி எட்டாவது வாரத்தின் இறுதியை நெருங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சி இறுதி கட்டம் நெருங்க நெருங்க போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். மேலும், தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிடியில் ஒளிபரப்பானது. இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-
biggboss

மேலும், இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சுஜா வருணி, ஷாரிக், அபிநய், தாடி பாலாஜி, சினேகன் வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் வெளியேறியதை தொடர்ந்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்ததில் இருந்து நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

- Advertisement -

கடந்த வாரம் வெளியேறியவர்:

கடந்த வாரம் வெளியேறியவர்:

பின் மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக ரம்யா பாண்டியன் வந்தார். பின் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் அனிதா, சுருதி, நிரூப், தாமரை, ஜூலி,சதீஷ் ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் அனிதா வெளியேறி இருந்தார். உண்மையில் இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த சீசனை விட இந்த சீசனில் தான் அனிதாவின் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது. இந்த முறை நிகழ்ச்சியில் அனிதா பல சர்ச்சையில் சிக்கி இருந்தார். இதனால் தான் இவர் வெளியேறி விட்டார் என்று பல கமெண்ட்ஸ்கள் வந்தது.

-விளம்பரம்-
Ramya-pandiyan

சுரேஷ் தாத்தா வெளியேற காரணம்:

இவரை தொடர்ந்து சில தினங்களுக்கு முன் திடீரென்று அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறி இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சுரேஷ் தாத்தா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தவிர்க்க முடியாத காரணத்தினால் போட்டியாளர்கள் வெளியேறினாலும் பிக் பாஸ் புது நபர்களை களமிறக்குகிறது. அந்த வகையில் தற்போது சாண்டி மற்றும் தீனா ஆகியோர் என்ட்ரி ஆகி இருந்தார்கள்.

நிகழ்ச்சியில் கெட்டப் டாஸ்க்:

இவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தவுடன் வீடே கலகலப்பாக மாறி சிரிப்பு மழையை பொழிந்து வருகிறது.
இந்த வாரம் அல்டிமேட் நிகழ்ச்சியில் கெட்டப் டாஸ்க் நடந்தது. அதில் பிரபலங்களின் கதாபாத்திரங்களாக போட்டியாளர்கள் மாறி அவர்களுடையபாடல்கள் வரும் போது மேடையில் நடனமாட வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு பிரபலங்களின் கெட்டப்பில் இருக்கிறார்கள். அதில் ரம்யா பாண்டியன் குஷி ஜோதிகா வேடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் அனிதா போல் சர்ச்சையில் சிக்கியிருக்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

வைரலாகும் ரம்யா பாண்டியன் வீடியோ:

அது என்னவென்றால், சாண்டி, தீனா, சதிஸ், ரம்யா பாண்டியன் ஆகிய நால்வரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அப்போது ரைமிங்காக தப்பு, உப்பு என்று பேசி இருக்கிறார்கள். உடனே ரம்யா பாண்டியன் பேச்சு ரொம்ப சப்பு என்று பேசியிருக்கிறார். இதற்கு சான்டி, தீனா இருவரும் சேர்ந்து ரம்யாவை கலாய்க்கிறார்கள். நான் ஏதோ யதார்த்தமாக உப்புச் சப்பு இல்லாதவன் என்பதை தான் அப்படி சொல்ல வந்தேன் என்று ரம்யா பாண்டியன் சொல்கிறார். இப்படி இவர்கள் பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement