பணப்பெட்டியை எடுத்துகொண்டு வெளியேறிய போட்டியாளர் – யார் தெரியுமா ? (டைடில் வின்னரின் இத்தனை லட்சம் போச்சே)

0
419
Suruthi
- Advertisement -

தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிடியில் ஒளிபரப்பானது. இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் ஒளிபரப்பி 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி எட்டாவது வாரத்தை கடந்து உள்ளது.

-விளம்பரம்-

தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்க இருப்பதால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் பொறாமை தொடங்கி விட்டது. அதோடு இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பல சர்ச்சைகள் எழுந்து கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சுஜா வருணி, ஷாரிக், அபிநய், தாடி பாலாஜி, சினேகன்,அனிதா வெளியேறிய நிலையில் வனிதா தாமாகவே வெளியேறினார்.

- Advertisement -

வைல்ட் கார்ட் எண்ட்ரி:

ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் நிகழ்ச்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் இருந்து நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பின் மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக ரம்யா பாண்டியன் வந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் சதீஸ் வெளியேறினார்.

சுரேஷ் தாத்தா வெளியேற காரணம்:

அதுமட்டும் இல்லாமல் கடந்த வாரம் திடீரென்று அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறி இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சுரேஷ் தாத்தா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் சாண்டி மற்றும் தீனா ஆகியோர் என்ட்ரி ஆகி இருந்தார்கள். இவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தவுடன் வீடே கலகலப்பாக மாறி சிரிப்பு நுழைந்தவுடன் பொழிந்து வருகிறது.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட காயின் டாஸ்க்:

அதுமட்டும் இல்லாமல் டாஸ்குகளும் கடுமையாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு கூட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பைனல்ஸ் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி அறிவிக்கவில்லை. இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து பிரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் காயின் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. ஜூலி, ஸ்ருதி ஆகிய இருவரும் கொடுக்கப்பட்ட வட்டத்திற்குள் நின்று ஒவ்வொரு முறை காயின் உருட்டும் போது அந்த நம்பருக்கு ஏற்றவாறு முன்செல்ல வேண்டும்.

15லட்சத்துடன் வெளியேறிய சுருதி :

அப்படி ஜூலியும், சுருதியும் மாற்றி மாற்றி காயினை உருட்டிக் கொண்டு செல்கிறார்கள். அதில் சுருதி வெற்றி பெறுகிறார். ஸ்ருதிக்கு 15 லட்சம் ரூபாய் தொகை கிடைக்கிறது. இதனால் சுருதி சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார். இந்த நிலையில் 15 லட்சத்துடன் சுருதி வெளியேறி இருக்கிறார். இவரது முடிவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும்,. இந்த 15 லட்சம் டைட்டில் வின்னரின் 50 லட்சத்தில் கழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement