Mute பன்னாகூட பேசுறது கேக்குதுடா எப்பா..! வைஷ்ணவியை கிண்டல் செய்த பிரபல காமெடி நடிகர்

0
602
- Advertisement -

காமெடி நடிகரான சதீஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் ஒரு பார்வையாளராக இருந்து வருகிறார். பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் சதீஷ், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வைஷ்ணவியை கிண்டல் செய்யும் விதமாக ‘முயூட் பண்ணா கூட வைஷ்ணவி பேசறது கேக்குது எப்பா’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Vaishnavi

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 3 நாட்களாக ஐஸ்வர்யா மற்றும் பொன்னம்பலம் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள சண்டை தான் ஹைலைட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. நேற்று ஒளிபரப்பான குறும்படத்தில் யாஷிக்கா மற்றும் ஐஸ்வர்யா பொன்னம்பலத்தை ஹிந்தியில் ‘கிழவன்’ என்று கிண்டல் செய்யத்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இந்தியில் பேசியதை மற்ற போட்டியார்களிடம் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார் வைஷ்ணவி, இதனை கேட்ட ஐஸ்வர்யா ‘என்னை பற்றி ஏன் மற்றவர்களிடம் தவறாக பேசுகிறாய் உன் வேலைய மட்டும் பாரு என கூறுகிறார். இதனால் ஐஸ்வர்யாவிற்கும், வைஷ்ணவிக்கும் சற்று வாக்கு வாதம் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், வைஷ்ணவி, ஐஸ்வர்யாவை சமாதானம் செய்வதற்காக நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், தவறு செய்த ஐவர்யாவே அவரின் பேச்சை கண்டுகொள்வதாக இல்லை.மற்ற போட்டியாளர்கள் அனைவருமே வைஷ்ணவியின் வாயை அடக்க சொன்னாலும் அவர் விடுவதாக தெரியவில்லை. தான் நல்லவள் என்று காட்டிக்கொள்ள வைஷ்ணவி அனைவரிடமும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.இதனை கிண்டல் செய்யும் விதமாகவே நடிகர் சதீஷ் வைஷ்ணவியை வாயாடி என்பது போல ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement