சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இந்த திரைப்படம் குறித்து பலரும் பாராட்டி வரும் நிலையில் பிக் பாஸ் 3 பிரபலம் இந்த படத்தை தான் என்ஜாய் செய்யவில்லை என்று கூறியுள்ளது பலரையும் வியப்பாக்கி உள்ளது. பொதுவாகவே உலகில் மிக பிரபலமான சாதனையாளர்களை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்று. சமீப காலமாகவே அனைத்து சினிமா திரை உலகிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள். அதிலும் பெயர் மறந்த இந்தியர்களை வைத்து படம் உருவாக்குவது சினிமாவில் அவ்வபோது தான் நிகளும்.
அந்த வகையில் ‘சூரரை போற்று’ திரைப்படமும் சாதனை படைத்த இந்தியர் ஒருவரின் வாழ்கை சம்பவம் தான்.இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.இந்த படம் முழுக்க முழுக்க ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் பயோபிக் படம் ஆகும். தமிழில் இந்த மாதிரி எடுக்கப்படும் படம் மிகவும் அரிதான செயலாகும். இந்த படம் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும்.
ஒரு சாதாரண மனிதன், அவனின் மலிவு விலை விமான டிக்கெட் கனவு, ஏர் ஒட்டுகிறவனும் ஏரோ பிளானில் பறக்க வைக்க வேண்டும் என்ற ஒரு லட்சியம்.இது தான் சூரரை போற்று படத்தில் வரும் நெடுமாறனின் கதாபாத்திரம். இந்த படத்தை பார்த்துவிட்டு பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். அவ்வளவு ஏன் இந்த படத்தை பார்த்துவிட்டு ஏர் டெக்கான் நிறுவனர் (இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள சூர்யாவின் உண்மை கதாபாத்திரத்துக்கு சொந்தக்காரர்) ஜி ஆர் கோபிநாத் கூட பாராட்டி இருந்தார்.
சொல்லப் போனால் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் சூர்யாவின் திரைப்படத்தில் இதுதான் முதல் பிளாக்பஸ்டர் படம் என்றும் கூறலாம். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு பிக் பாஸ் 2 போட்டியாளரான வைஷ்ணவி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘சூரரை போற்று படத்தை என்ஜாய் செய்யாதது நான் மட்டும் தானா ‘ என்று பதிவிட்டுள்ளார். ஊரே பாராட்டும் சூரரை போற்று படம் பற்றி வைஷ்னவி இப்படி பதிவிட்டுள்ளது பலரையும் வியப்படைய செய்துள்ளது.