பணம் விளையாடி இருக்கு, ஓட்டிங்கில் Fraud நடந்து இருக்கு – இன்னும் அர்ச்சனா கப்பே கைல வாங்கல அதற்குள் புலம்பிய வனிதா.

0
189
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 இன் டைட்டில் பட்டம் வென்றவர் குறித்து வனிதா அளித்திற்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்களை கடந்து இன்று இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், அன்னயா, ரவீனா, விசித்திரா, பூர்ணிமா ரவி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் உடைய கடைசி வாரம் என்று சொல்லலாம். இன்று மாலை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெறுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு, மாயா, மணி, தினேஷ், அர்ச்சனா ஆகிய ஐந்து பேர் இருக்கிறார்கள்.

- Advertisement -

டைட்டில் வென்றவர்:

மேலும், இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்தவர் அர்ச்சனா. இவர் தான் இந்த சீசனில் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை தினேஷ், நான்காம் இடத்தை விஷ்ணு, ஐந்தாம் இடத்தை மாயா பிடித்து இருக்கிறார்கள். மேலும், அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்நிலையில் இது தொடர்பாக வனிதா பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வனிதா பேசிய வீடியோ:

அந்த வீடியோவில் வனிதா, இந்த சீசனின் டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆனால், என்ன நடக்கப் போகிறது என்பது யாருக்குமே தெரியாது. பிக் பாஸ் டீம் என்ன செய்வார்கள்? என்றும் தெரியாது. அடிப்படையில் இந்த நிகழ்ச்சி மீது எங்கேயோ ஒரு இடத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எல்லா முறையும் நியாயமாக தான் வெற்றி பெற்றிருக்கிறார்களா? என்று பார்த்தால் கிடையாது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சொன்னது:

சில சீசனங்களில் இவர்களுக்கு கிடைத்ததா? என்று என்னாலையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், இந்த சீசனில் மட்டும்தான் நிறைய விஷயங்கள் நடந்திருக்கிறது. அது வெளியேவும் தெரிய வந்திருக்கிறது. ரொம்பவே பணம் விளையாடியிருக்கிறது. ஒரு சில விஷயங்கள் நடந்திருப்பது வெளிப்படையாகவே தெரிந்திருக்கிறது. குறிப்பாக, எனக்கு நெருக்கமானவர்கள் ஒருவர் மூலம் அக்ரீமெண்ட்டில் சைன் போட்டு பணம் கொடுத்திருப்பதை பார்த்திருக்கிறார்.

டைட்டில் குறித்து சொன்னது:

அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. மக்கள் பார்த்து போட வேண்டிய ஓட்டு வாங்கப்பட்டிருக்கிறது என்று நினைத்தால் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. இருந்தாலும், என்ன வேணாலும் நடக்கலாம். கண்டிப்பாக நானும் கிராண்ட் பினாலே வருவேன். இந்த முறை என் மகள் கலந்திருப்பதால் கொஞ்சம் எனக்கு ஸ்பெஷல். என்னுடைய மகளுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு பிள்ளையார் சுழி போன்றது. ஜோவிகா யார்? என்பதை நிரூபிக்க இந்த நிகழ்ச்சி அவளுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று கூறி இருந்தார்.

Advertisement