பீட்டர் பாலை நீ இதனால் தான துரத்திவிட்ட – வனிதாவை திட்டி தீர்த்து டிக் டாக் சூர்யா வெளியிட்ட வீடியோ.

0
1849
surya
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் தான். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா, பீட்டர் பவுல் என்பவரை மூன்றாம் முறையாக திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.வனிதா மூன்றாம் திருமணம் செய்துகொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர் பவுலின் மனைவி எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விஷயம் சமூக வலைதளத்தில் சில காலம் பேசும் பொருளாக இருந்து வந்தது.

-விளம்பரம்-

இந்த விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் தங்கள் கருத்தை தெரிவிக்க பின்னர் அது குழாய் அடி சண்டை ரேன்ஜிக்கு மாறியது. அதிலும் தனது திருமண விஷயத்தில் தலையிட்டதால் லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் பேட்டியில் வாடி போடி என்று படு மோசமாக பேசி அசிங்கப்படுத்தினார் வனிதா. இதையடுத்து தன்னை அவதூறாக பேசி விட்டார் என்று வனிதா மீது லட்சுமி ராமகிருஷ்ணனும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்து தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதாவும் மாறி மாறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள்.

- Advertisement -

இந்த பிரச்சனை சென்று கொண்டே இருக்க இனி வனிதா விஷயத்தை பற்றி நான் பேசவே மாட்டேன் என்று ட்விட்டரில் கூறிவிட்டார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். பின்னர் எத்தனையோ பிரச்சனைக்கு பின்னர் இந்த பிரச்சனை ஓய்ந்தது. இப்படி ஒரு நிலையில் தான் வனிதா, பீட்டர் பவுலை பிரிந்ததாக அறிவித்தார். அதேபோல பீட்டர் பிரிந்த சோகத்தில் இருக்கும் வனிதா இனி கொஞ்சம் நாள் தான் சமூகவலைதளத்தில் வரமாட்டேன் என்றும் கூறியிருந்தார். வனிதா, பீட்டர் பவுலை பிரிந்துவிட்டதாக அறிவித்தவுடன் பலரும் வனிதாவை கடுமையாக விமர்சித்து இருந்தார்கள்.

இப்படி ஒரு நிலையில் டிக் டாக் பிரபலமான ரவுடி பேபி சூர்யா தனது யூடுயூப் பக்கத்தில் வனிதா குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் நீ எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள் ஆனால் அதையெல்லாம் ஏன் சமூக வலைத்தளத்தில் கூறி அழுகிறாய். நீயே ஏன் பீட்டர் பவுலை துரத்தி விட்டாய் என்பது எனக்கு தெரியும் என்று கூறியுள்ள சூர்யா, இன்னொரு முறை நீ ஏதாவது அழுது புலம்பி வீடியோ போட்டால் கண்டிப்பாக உன்மீது நான் வழக்கு தொடருவேன் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement