பீட்டர் பாலை துரத்தி விட்ட வனிதா – மக்களின் வார்த்தைகள் நிஜமானது என்று குஷியில் இருக்கும் நபர்.

0
3603
vanitha
- Advertisement -

சமூக வலைதளத்தில் தற்போது வேண்டுமானால் மீரா மிதுன் ஹாட் டாபிக்காக இருந்து வந்தாலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் தான். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா, பீட்டர் பவுல் என்பவரை மூன்றாம் முறையாக திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வனிதா மூன்றாம் திருமணம் செய்துகொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர் பவுலின் மனைவி எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

-விளம்பரம்-
vanitha

இந்த விஷயம் சமூக வலைதளத்தில் சில காலம் பேசும் பொருளாக இருந்து வந்தது. இந்த விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் தங்கள் கருத்தை தெரிவிக்க பின்னர் அது குழாய் அடி சண்டை ரேன்ஜிக்கு மாறியது. பின்னர் எத்தனையோ பிரச்சனைக்கு பின்னர் இந்த பிரச்சனை ஓய்ந்தது.விரைவில் சட்ட ரீதியாக பீட்டர் விவாகரத்து பெற்ற பின்னர் தங்கள் திருமணம் நடைபெறும் என்று வனிதா அறிவித்து இருந்தார்.

- Advertisement -

மேலும், அவ்வப்போது யூடியூபில் இணைந்து வீடியோ பகிர்ந்து வந்தார் வனிதா. அதே போல எங்கு சென்றாலும் பீட்டர் பவுலுடன் தான் வனிதா சென்று வந்தார். வனிதா நடத்தி வரும் யூடுயுப் சேனலுக்கு கூட பீட்டர் பவுல் தான் பல உதவிகளை செய்து வந்தார். சமீபத்தில் கூட மனிதன் தனது 40வது பிறந்தநாளை கோவாவில் கொண்டாடினார் அப்போதுகூட குடும்பத்தோடு தான் இருந்தார் வனிதா. அங்கே கூட பீட்டர் பவுலின் உதவியோடு ஒரு யூடுயூப்பிர்கு சமையல் வீடியோ ஒன்றை கூட பகிர்ந்தார் வனிதா.

இப்படி ஒரு நிலையில் வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பவுலை வனிதா வீட்டைவிட்டு துரத்தி விடப்பட்டதாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ஆமாம் சரிபார்க்கப்பட்டு விட்டது அனைவரின் வார்த்தைகளும் உண்மையாகிவிட்டது வீட்டில் இருந்து துரத்தப்பட்டார் பிபி என்று பதிவிட்டுள்ளார் இதற்கு ஏற்றார்போல கடந்த இரண்டு மூன்று தினங்களாக வனிதாவின் சமூக வலைதள பக்கங்களில் எந்த ஒரு பதிவும் போடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement