ஒருத்தரோட மரணத்துல கூட காசு பாப்பீங்களா ? வனிதாவை கழுவி ஊற்றும் சித்ராவின் ரசிகர்கள்.

0
1565
vanitha
- Advertisement -

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா குறித்து தனது யூடுயூப் பக்கத்தில் வனிதா சிறப்பு லைவ் பேட்டி ஒன்றை திட்டமிட்டுள்ளார். இதனை பார்த்த சித்ராவின் ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்தார். ஹேம்நாத் அளித்த தகவலின் பெயரிலேயே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை முன்னுக்கு பின்னாக ஹேம்நாத் கூறி வருவதாக தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-

சித்ராவின் மரணத்தை அடுத்து அவரது கணவர் ஹேம்னாத்திடம் 6 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கடந்த டிசம்பர் 14 சித்ராவின் மரணம் குறித்து இரு தரப்பினரையும் விசாரிக்க ஆர்.டி.ஓ. வுக்கு உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில் சித்ராவின் பெற்றோர்களிடம் ஆர் டி ஓ விசாரணை நடத்தப்பட்டது. சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம் நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் பாருங்க : எனக்கும் பாலாஜிக்கும் என்ன உறவு – முதன் முறையாக மனம் திருந்த யாஷிகா.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சித்ராவின் மறைவு குறித்து தனது யூடுயூப் சேனலில் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றை இன்று மாலை 4 மணிக்கு நடத்த இருப்பதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் வனிதா.மேலும், அதன் Thumbnail புகைப்படத்தில் வனிதாவும் அவருடைய ஆஸ்தான வழக்கறிஞ்சரான ஸ்ரீதரின் புகைப்படத்தையும் போட்டு இருக்கிறார் வனிதா. இந்த பதிவை பார்த்த பலரும் என்று ‘அடுத்தவங்க மரணத்தில் இருந்து கூட பணம் சம்பாதிக்க பார்ப்பீர்களா’ என்றும் செத்தவங்கள வச்சி இப்படி சேனலுக்கு விளம்பரம் தேடுகிறாய் என்று வனிதாவை கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர்.

சித்ரா இறந்த மறு நாள், அவரது மறைவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த வனிதா, இந்த வருடத்தில் நான் கேட்ட மிகவும் அதிர்ச்சியான ஒரு செய்தி. #சித்ரா என்ன நடந்தது ? கடந்த வாரம் தான் அவளை KPY நிகழ்ச்சியில் சந்தித்தேன். விருந்தினராக வந்திருந்தால். மிகவும் அழகான, தைரியமான, சந்தோஷமான பெண். அவளை பார்த்தாள் எனக்கு ரேஷ்மாவின் ஞாபகம் வருகிறது என்று அவளிடம் சொன்னேன். தற்கொலையா? கண்டிப்பாக நம்பமுடியவில்லை ஏதோ மர்மமாக இருக்கிறது. கடந்த இரவு தான் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதே செட்டிற்கு அருகில் தான் எங்களுடைய KPY படப்பிடிப்பும் நடந்தது. நாங்கள் அனைவரும் இரவு 2.30 மணிக்கு கிளம்பினோம். நேராக அவளது ஹோட்டலுக்கு சென்று தற்கொலை செய்து கொண்டாளா? மிகவும் தவறு, அவள் இன்னமும் என் கண்ணுக்குள்ளே இருக்கிறாள் என்ன ஒரு அசிங்கம் என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement