துரதிஷ்ட வசமாக இந்த பெண்ணின் வாயில் செக்கிக்கொண்டேன் – வனிதா குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் போட்ட பதிவு.

0
1110
vanitha
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் தான். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா, பீட்டர் பவுல் என்பவரை மூன்றாம் முறையாக திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.வனிதா மூன்றாம் திருமணம் செய்துகொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர் பவுலின் மனைவி எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விஷயம் சமூக வலைதளத்தில் சில காலம் பேசும் பொருளாக இருந்து வந்தது.

-விளம்பரம்-

இந்த விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் தங்கள் கருத்தை தெரிவிக்க பின்னர் அது குழாய் அடி சண்டை ரேன்ஜிக்கு மாறியது. அதிலும் தனது திருமண விஷயத்தில் தலையிட்டதால் லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் பேட்டியில் வாடி போடி என்று படு மோசமாக பேசி அசிங்கப்படுத்தினார் வனிதா. இதையடுத்து தன்னை அவதூறாக பேசி விட்டார் என்று வனிதா மீது லட்சுமி ராமகிருஷ்ணனும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்து தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதாவும் மாறி மாறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள்.

- Advertisement -

இந்த பிரச்சனை சென்று கொண்டே இருக்க இனி வனிதா விஷயத்தை பற்றி நான் பேசவே மாட்டேன் என்று ட்விட்டரில் கூறிவிட்டார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். பின்னர் எத்தனையோ பிரச்சனைக்கு பின்னர் இந்த பிரச்சனை ஓய்ந்தது. இப்படி ஒரு நிலையில் தான் வனிதா, பீட்டர் பவுலை பிரிந்ததாக அறிவித்தார். அதேபோல பீட்டர் பிரிந்த சோகத்தில் இருக்கும் வனிதா இனி கொஞ்சம் நாள் தான் சமூகவலைதளத்தில் வரமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், பிரபல யூடுயூப் சேனலில் வனிதா தர்பார் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் வனிதா, தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலாஜி விஷயம் குறித்து விவாதித்த வனிதா, பாலாஜியை கண்ட மேனிக்கு விமர்சித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த வீடீயோவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் ‘என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை ‘ என்று பதிவிடுள்ளார். ஏற்கனவே, இந்த பேட்டி குறித்து பேசிய ரவீந்தர், வனிதா குடித்துவிட்டு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று சூசகமாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement