இது எனக்கு நானே கொடுத்துக்கும் தண்டனை – வனிதாவால் லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு.

0
14463
lak
- Advertisement -

வனிதாவால் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் தான். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா, பீட்டர் பவுல் என்பவரை மூன்றாம் முறையாக திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வனிதா மூன்றாம் திருமணம் செய்துகொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர் பவுலின் மனைவி எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விஷயம் சமூக வலைதளத்தில் சில காலம் பேசும் பொருளாக இருந்து வந்தது.

-விளம்பரம்-

இந்த விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் தங்கள் கருத்தை தெரிவிக்க பின்னர் அது குழாய் அடி சண்டை ரேன்ஜிக்கு மாறியது. அதிலும் தனது திருமண விஷயத்தில் தலையிட்டதால் லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் பேட்டியில் வாடி போடி என்று படு மோசமாக பேசி அசிங்கப்படுத்தினார் வனிதா. இதையடுத்து தன்னை அவதூறாக பேசி விட்டார் என்று வனிதா மீது லட்சுமி ராமகிருஷ்ணனும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்து தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதாவும் மாறி மாறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள்.

- Advertisement -

இந்த பிரச்சனை சென்று கொண்டே இருக்க இனி வனிதா விஷயத்தை பற்றி நான் பேசவே மாட்டேன் என்று ட்விட்டரில் கூறிவிட்டார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். பின்னர் எத்தனையோ பிரச்சனைக்கு பின்னர் இந்த பிரச்சனை ஓய்ந்தது. இப்படி ஒரு நிலையில் வனிதாவால் ஏற்பட்ட வலியால் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன்.

lakshmi

நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த போது என் குடும்பத்தில் பல எதிர்ப்புகள் சினிமாவிற்குள் மற்ற துறைகளில் கூட வேலை செய் ஆனால் நடிக்க வேண்டாம் இதனால் சிலரது தவறான பார்வையில் மாற்றிக் கொள்வீர்கள் என்று பலரும் சொன்னார்கள். ஆனால், அதை ஏற்க மறுத்து நாம் சரியாக இருந்தால் எதுவும் தவறாக நடக்காது என்று சொல்லி நடிக்க ஆரம்பித்தேன். அதேபோல மக்கள் பிரச்சினைக்கும் என்னால் இயன்ற பங்களிப்பை கொடுத்து வருகிறேன். அந்த வகையில் என்னை தேடி வந்த ஒரு பெண்ணுடைய பிரச்சனைக்கு குரல் கொடுத்தேன். தனிநபர் தாக்குதல் இல்லாமல் மிகவும் கண்ணியத்துடன் தான் அந்த நடிகையிடம் பேச ஆரம்பித்தேன். ஆனால், அவர்கள் என்னை எப்படியெல்லாம் பேசினார்கள் என்று பலரும் பார்த்திருப்பார்கள்.

-விளம்பரம்-

பொறுமை இழந்து நான் சில வார்த்தைகள் பேசும் அளவிற்கு அவர்கள் தரக்குறைவாக நடந்து கொண்டார்கள். சினிமா குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு நடிகையே நானும் இந்தத் துறையில்தான் இருக்கிறேன் எனக்கு தெரியாதா உன்னைப்பற்றி என்று சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘இந்த நடிகைகளே இப்படித்தான்’ என்று போற போக்கில் பலரும் பேசுவார்கள். ஆனால், ஒரு நடிகையே சக நடிகைகளை கீழ்த்தரமாக பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ? அந்த நடிகை பேசிய அருவருப்பான வார்த்தைகளால் நடிகை என்று சொல்லிக் கொள்ளவே எனக்கு வருத்தமாக இருக்கிறது. அந்த கசப்பான நிகழ்வால் நான் மிகவும் உடைந்து போனேன். எனவே, இனி நடிக்கவே வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன. இனி இயக்குனர் பணியை மட்டுமே செய்யலாம் என்று இருக்கிறேன் என்று கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

Advertisement