வனிதா அக்கா உங்க கால்ல விழுந்த எங்க அப்பாவ விடுவீங்களா – பீட்டர் மகனின் கண்ணீர் பேட்டி.

0
3982
vanitha
- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. ஏற்கனவே 2 முறை திருமணமான வனிதா தற்போது ஏற்கனவே திருமணமான பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், பீட்டர் பவுல் தனது முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல் வனிதா திருமணம் செய்து கொண்டதால் இந்த திருமணமும் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

பல்வேறு பிரச்சனைகள் சென்று கொண்டு இருந்தாலும், வனிதா ஒரு புறம் பீட்டருடன் சந்தோசமாக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட பீட்டர் பவுலின் பிறந்த நாளை கொண்டாடிய வனிதா புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இருந்தார். பீட்டர் பவுல் மகன் ஜான், தனது தந்தைக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்து சொல்லுமாறு ரவீந்திரனுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.

- Advertisement -

ஜான் அனுப்பிய மெசேஜை வனிதாவுக்கு அனுப்பியுள்ள ரவிந்திரன் தன் பங்கிற்கு பீட்டர் பவுலுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள பீட்டர் பவுலின் மனைவி மற்றும் மகன், நாங்கள் சாக வேண்டும் என்று கிஸ் கொடுப்பது, கைகோர்த்துக்கொண்டு பேட்டி கொடுப்பது என்று செய்து கொண்டு இருக்கிறார்களா என்று கேட்டுள்ளனர்.

https://www.facebook.com/photo?fbid=10216807308357170&set=pcb.10216807348718179

மேலும், பீட்டர் மகன் பேசுகையில், நான் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன் அதற்கு கூட நீங்கள் எதுவும் சொல்லவில்லை. உங்கள் மீது இருந்த கோபம் போய் இப்போ என் மீது வெறுப்பு வந்துவிட்டது. எதாவது செய்துகொள்ளலாம் என்று நினைத்து வருகிறேன். வனிதா அக்கா உங்கள் காலில் விழுந்தால் என் அப்பாவை விடுவீர்களா என்று கண்ணீர் மல்க கேட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement