நடிகையும் பிக் பாஸ் சீசன் 3யின் போட்டியாளரான வனிதாவுக்கு அறிமுகம் தேவையில்லை. இந்த நிலையில் வனிதாவுக்கு மூன்றாவது திருமணம் நடைபெற இருப்பதாக வெளியான செய்தி தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மஞ்சுளாவின் மகளான வனிதா விஜய்யின் சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் ஓரிரு படங்களில் நடித்த வனிதா கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கி இருந்தார்.
இந்த நிலையில் வனிதாவிற்கு பீட்டர் பவுல்என்பவருடன் வரும் ஜூன் 27 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது என்று திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த நிலையில் வனிதா தனது திருமணத்தை உறுதி செய்யும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வாழ்க்கையில் சில கசப்பான அனுபவங்களை சந்தித்த அனைவருக்குமே கண்டிப்பாக காதலில் மறு வாய்ப்பு என்பது கொடுக்கப்பட வேண்டும்.
ஒருவருக்கு ஒருவர் காதலிக்கும்போது அது ஒரு உறவின் தொடக்கமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கும் போது அது கொண்டாட்டமாக அமைகிறது .40 வயதை நெருங்கிக் கொண்டு இருக்கும் எனக்கு இந்த லாக்டவுன் வாழ்க்கையே பற்றிய பல்வேறு விதமான தெளிவு கிடைத்தது. மேலும், எனக்கு எது முக்கியம் என்பதையும் கற்றுக் கொடுத்தது. கடந்த நான்கு மாதமாக இன்றைய வாழ்க்கை பல்வேறு மேடு பள்ளத்தை சந்தித்துள்லேன். எல்லா பெண்களுக்கும் தனக்கு பொருத்தமான ஒரு சிறந்த துணையை கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் கனவு.
ஆனால் என்னுடைய கனவு தற்போது நிறைவேறி விட்டது. அவர்தான் பீட்டர் பவுல் எனது வாழ்க்கைக்குள் நுழைந்து என்னுடைய தனிமையை போக்கியவர் நான் மிகவும் பாதுகாப்பாகவும் முழுமை இருக்கிறேன் என்று அவருடன் இருக்கும்போது தோன்றுகிறது என்னுடைய வாழ்க்கையில் அவர் ஒரு நண்பராக நுழைந்து என்னுடைய யூடியூப் சேனலுக்கு நிறைய உதவிகளை செய்தார். இதனால் என்னை அக்கறையாக கவனித்துக் கொண்டது போல உணர்ந்தேன். உங்கள் அனைவருக்கும் தெரியும் என்னுடைய பிள்ளைகள் தான் எனக்கு முக்கியம் என்று அவரிடம் இதற்கு என்னுடைய குழந்தைகள் சம்பாதிக்க வேண்டும் என்று கூறினேன். திருமணம் குறித்து என்னிடம் அவர் பேசியபோது என் மனதுக்குள் ஆம் என்றுதான் தோன்றியது. அதேபோல என் பிள்ளைகளிடம் அவர் பேசியபோது அவர்களும் இதற்கு சம்மதித்து விட்டார்கள்.
பீட்டர் போல் யார் என்று கேட்பவர்களுக்கு. அவர் ஒரு திரைப்பட இயக்குனர். அன்பானவர்,அக்கறை ஆனவர் மற்றும் என் மனதை திருடிய நேர்மையான மனிதர் மற்ற அனைத்தும் நீங்கள் கூடிய விரைவில் தெரிவித்துக் கொள்வீர்கள். எங்களது திருமணம் அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப நடைபெறும். மேலும், இந்த திருமணத்தில் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்வார்கள் திருமணத்திற்குப் பின்னர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் நான் வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளார்.
வனிதாவுக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் ஆனது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இரண்டு விவாகரத்திற்கு பின்னர் பிரபல சினிமா நடன இயக்குனரான ராபர்ட்டுடன் பழக்கத்தில் இருந்து வந்தார் வனிதா. மேலும் ராபர்ட் நடித்த எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தையும் இருந்தார் வனிதா. அதன் பின்னர் நடந்த 2018 ஆம் ஆண்டு ராபர்ட்டிற்கும் தனக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருந்ததாகவும். ஆனால், அவருக்கு விவாகரத்து கிடைக்காததால் எங்கள் திருமணம் நடக்கவில்லை என்றும் வனிதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.