இப்படி தான் பிக் பாஸ் போட்டியாளர்களை தேர்வு செய்வார்கள் – பிக் பாஸ் 4 குறித்து பேசிய வனிதா.

0
4703
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது மே, ஜூன் மாதம் வரப்போவதால் சீசன் 4க்கான டைம் வந்து விட்டது. இந்நேரத்துக்கு பிக் பாஸ் போட்டியாளர்களை எல்லாம் தேர்வு செய்திருப்பார்கள். ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த சீசனில் யார் யார் எல்லாம் பங்குபெற போகிறார்கள் என்று அடிக்கடி சமூக வலைதளத்தில் சில பெயர்கள் அடிபடுகிறது.

வீடியோவில் 7 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

-விளம்பரம்-

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதாவிடம் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி குறித்தும், அதில் போட்டியாளராக யார் போக போகிறார்கள் என்பது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த வனிதா, தற்போது உள்ள நிலைமையில் பிக் பாஸ் ஆரம்பிக்கபடுமா என்பது தெரியவில்லை. ஆனால், இந்த சீசனில் நடிகை அம்பிகா போனால் மிகவும் நன்றாக இருக்கும், காரணம் அவர் மிகவும் தைரியமான ஒரு ஆள். படத்தில் பார்க்கும் அம்பிகா வேறு நிஜ அம்பிகா வேறு என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த அடிப்படையில் போட்டியாளர்களை தேர்வு செய்வார்கள் என்பது குறித்து பேசிய வனிதா. பிக் பாஸ் நிகழ்ச்சி பொறுத்த வரை கண்ணை மூடிக்கொண்டு போட்டியாளர்களை தேர்வு செய்வது கிடையாது. வெறும் பிரபலத்தை மட்டும் வைத்தும் தேர்வு செய்யமாட்டார்கள். மேலும், பல சைக்காலஜி டெஸ்ட் செய்து பல தேர்வுகளை வைத்து தான் தேர்வு செய்வார்கள் என்று கூறியுள்ளார் வனிதா.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற கோமாளிகளில் சிலர் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற செய்தி குறித்து பேசிய வனிதா. உண்மையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற கோமாளிகளை மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பினால் நன்றாக இருக்கும். குறிப்பாக புகழ், பாலா, சிவிங்கி போன்றவர்களை அனுப்பினால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து என்று கூறியுள்ளார் வனிதா.

-விளம்பரம்-
Advertisement