என்னையும் விஜய்யையும் பத்திரிகையில் தவறாக எழுதினாங்க – அப்போ விஜய் என்கிட்டே வந்து . வனிதா சொன்ன சீக்ரெட்.

0
4334
vanitha
- Advertisement -

சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் வனிதா சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருந்தார். பின் நடிகை வனிதா 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2005 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

-விளம்பரம்-

நடிகை வனிதா அவர்கள் ராஜன் ஆனந்த் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். தற்போது நடிகை வனிதா அவர்கள் தனியாகத்தான் தன் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். நடிகை வனிதாவுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளார்கள். சமீபத்தில் கூட இவர்களின் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகை வனிதா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வனிதா சொந்தமாக ஒரு யூடுயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று (ஜூன் 22) விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது யூடுயூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் வனிதா.

அதில், விஜய் ஒரு மிகப்பெரிய ஸ்டாராக வருவார் என்று எனக்கு அப்போதே தெரியும் எங்கள் இருவருக்கும் பல்வேறு நினைவுகள் இருக்கிறது அதில் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் நான் இன்று இந்த அளவிற்கு, தைரியமாகவும், பாசிட்டிவாகவும் இருக்கிறேன் என்றாலும் சர்ச்சைகளுக்கு பயப்படாமல் இருக்கிறேன் என்றாலும் விஜய் தான் காரணம். அப்போதெல்லாம் சமூக வலைதளம் கிடையாது செய்திகள் அனைத்தும் பத்திரிகைகளில் வெளியாகும். அந்த வகையில் என்னைப் பற்றியும் விஜய் பற்றியும் பத்திரிகையில் தவறான ரூமர் ஒன்று வெளியாகியிருந்தது.

-விளம்பரம்-

அதை நினைத்து நான் அழுது கொண்டிருந்தேன். ஆனால், அப்போதும் விஜய் பொறுமையாகத்தான் இருந்தார். ஆனால், நானோ என்னை பற்றி தவறாக எழுதுகிறார்கள் அதைப்பற்றி உனக்கு எந்த கவலையும் இல்லை என்று கேட்டேன். அதற்கு அவர் ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள். உன்னை பற்றி பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் என்றால் உன்னை பற்றி அவர்கள் நினைவில் வைத்துக்கொள்கிறார்கள் என்று அர்த்தம். என்னைக்கு உன்னை பத்தி எழுதவில்லையோ அன்னைக்கு நீ இல்லை என்று அர்த்தம். அதனால் அன்னைக்கு தான் நீ கவலைப்பட வேண்டும். எனவே, இதை பற்றியெல்லாம் கவலைப்படாதே இது உனக்கு ஒரு பப்ளிசிட்டி என்று கூறினார். அன்று அவர் சொன்னது எனக்கு சத்தியமாக புரியவில்லை. ஆனால் ஒரு காலகட்டத்தில் அது எனக்கு மிகவும் தெளிவாக தெரிந்தது என்று கூறியுள்ளார்.

Advertisement