இவன் பிறப்புல தப்பிருக்கு, உள்ள போனா அவன செருப்பால அடிப்பேன் – ‘அட்ஜெஸ்ட்மன்ட்’ விகாரத்தில் பாலாஜியை வறுத்தெடுத்த வனிதா.

0
49962
vanitha
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்து பாலாஜி, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்றய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் யாரிடம் பிரச்சனை இருக்கிறதோ அதனை புகாராக எழுத வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார். மேலும், அப்படி குற்றம் சாட்டப்படும் போட்டியாளர்கள் இருவரையும் கூண்டுக்குள் நிற்கவைத்து நீதிபதியாக சுசித்ரா பஞ்சாயத்து செய்து வைத்திருக்கிறார். பாலாஜி மற்றும் சனம் ஆகி இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி புகார்களை எழுதினர். ஆனால், அந்த ப்ரோமோவை நீக்கி இருக்கிறது விஜய் டிவி.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-15-853x1024.jpg

அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டி எழுதிய புகாரில் பாலாஜி குறித்து எதோ சர்ச்சையான விஷயத்தை எழுதி இருப்பதால் தான் என்று கூறப்படுகிறது. சனம் ஷெட்டி எழுதிய கடிதத்தில் பாலாஜி,நான் டைட்டில் வின்னராக இருக்கும் பியூட்டி பேஜன்டுக்கு எதிராக அட்ஜஸ்ட்டமென்ட் மற்றும் காம்ப்ரமைஸ் என்ற வார்த்தையை பயன்டுத்தியதாகவும். யாரோ ஒரு மூன்றாம் நபர் சொன்ன ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்னுடைய நேர்மைக்கு களங்கம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயம் வெளியானால் கண்டிப்பாக சமந்தபட்ட அந்த பியூட்டி பேஜன்ட் நிறுவனமும் அதில் பங்குபெற்ற அணைத்து பெண் போட்டியாளர்களும் பாலாஜிக்கு எதிராக குற்றம் சாட்ட வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

எனவே, இதனை பெரிதாக்க விரும்பாமல் ப்ரோமோவையே நீக்கியது விஜய் டிவி. அதேபோல நேற்றைய நிகழ்ச்சியில் சனம் பாலாஜிக்கு எதிராக புகார் எழுதிக் கொண்டிருக்கும்போது கூடுதலாக 2 பேப்பரை வாங்கி புகார் எழுதி இருந்தார். அந்த அளவிற்கு பாலாஜி மீது புகார்கள் குவிந்தன. இதனிடையே இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் நேற்றைய நிகழ்ச்சியில் சனம் மற்றும் பாலாஜி விஷயத்தில் நடுவராக இருந்து தீர்ப்பு வழங்கிய சுசித்ரா பாலாஜிக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பை அளித்திருந்தார்.

இந்த தீர்ப்பை ரசிகர்கள் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து வனிதா பேட்டி ஒன்றில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அவன் எப்படி ஒரு பெண்ணை குறித்து அப்படி ஒரு வார்த்தையை சொல்லுவான். அவனுக்கு என்ன தைரியம். அவனுடைய அம்மா பற்றியே அவன் அப்படி சொன்னவன் தானே. அவன் பிறப்பில் எதோ தவறு இருக்கிறது. அதான் அப்படி பேசுகிறான். நான் உள்ளே சென்றால் அவனை செருப்பால் அடித்து விடுவேன் ஒரு நபரை பற்றி அவர் செய்யும் விஷயங்களைப் பற்றி சொல்லலாம் இல்லை அவரைப்பற்றி கருத்துக்களைச் சொல்லலாம் ஆனால் வாய்ப்புக்காக அவர் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொண்டார் என்று சொல்ல அவன் யார் இவனும் அப்படி செய்து தான் மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றால் இது போன்ற ஆட்களுக்கு எல்லாம் கற்பழிப்பில் ஈடுபடும் நபருக்கு கொடுக்கும் தண்டனையை கொடுக்க வேண்டும்.

-விளம்பரம்-
Advertisement