பிக் பாஸ் வனிதாவின் மூன்றாவது திருமணம் சனிக்கிழமை (ஜூன் 27 ) அவரது வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் கொண்டாட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பவுளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பது சமீபத்தில் தான் தெரியவந்துள்ளது. மேலும், பீட்டர் பவுல் தனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே வனிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார் அவரது மனைவி.
சமீபித்தல் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பீட்டரின் மனைவி, என் கணவருக்கு சரியான வருமானம் கிடையாது, அவருக்கு வேலை செய்யும் இடத்தில் எல்லாம் பழக்கம் இருக்கிறது. திருமண செய்தியை அறிந்து நான் கேள்விப்பட்ட போது நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், காவல் நிலையத்திலேயே வனிதாவை பற்றி உனக்கு தெரியாதாம இன்னும் 6 மாசமோ ஒரு வருசமயோ தொரத்திவிட்ற போறாங்கனு சொன்னாங்க.
மேலும், என் கணவரிடம் எனக்கு விவாகரத்து தறாமல் எப்படி திருமணம் செய்துகொள்வீர்கள் என்று கேட்டேன். மேலும், போலீஸ் நிலையத்திலும் நான் முறைப்படி விவாகரத்து பெறாமல் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று எழுதி வாங்கி கொண்டார்கள். ஆனால், அதை என்னிடம் கொடுக்கவில்லை. நானும் நம்பிவிட்டு விட்டேன். ஆனால், அதை எல்லாம் மீறி எந்த தைரியத்தில் கல்யாணம் பண்ணார்.
மேலும், அவசர அவரசமாக திருமணம் முடித்தது ஏன் ? இன்னொரு புருஷன் என்று தெரிந்தும் இப்படி செய்வீயா. என் மகனை வனிதா வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.அவனும் நடிகையை பார்க்க செல்கிறோம் என்று நினைத்து தான் போனான். ஆனால், அவனுக்கு சம்மதம் என்று இருவரும் சொல்ராங்க. அவனோ வனிதாவை அக்கா என்று தான் கூப்பிடுகிறான்.