கலராக இருந்து, நாலு வார்த்த இங்கிலீஷ் பேசி இருந்தா எல்லோருக்கும் நண்பனாகி இருப்பேன் – வேல்முருகன் ஆதங்கம்.

0
62591
vel
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் ஒருவர். பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக ரேகா வெளியேறிய நிலையில் கடந்த வாரம் வேல்முருகன் வெளியேற்றப்பட்டு இருந்தார் வேல்முருகன் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது பாலாஜி ஓடிச்சென்று அஜித்தை கட்டிப்பிடித்தது பலரையும் கொஞ்சம் முகம் சுளிக்க வைத்தது இப்படி ஒரு நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் வேல்முருகன்.

-விளம்பரம்-

டிப்ளோமேடிக், குரூப்பிஸம், ஃபேவரிடசம் என்கிற வார்த்தைகளுக்கு எல்லாம் எனக்கு அர்த்தம் தெரியாது.நியாயமாக விளையாடி, யாரையும் காயப்படுத்தாமல், என் டாஸ்க்கைச் சரியாகச் செய்ய நினைத்தேன். பலமுறை என்னை அநியாயமாக நடத்தினார்கள் அந்த இடத்தில் அனிதாவோ, பாலாஜியோ , ஆரியோ இருந்திருந்தால் அவர்கள் பெரிய பிரச்சனை செய்து இருப்பார்கள். ஆனால், அதை நான் செய்யவில்லை. பிக்பாஸ் இல்லத்தில் யாரும் என்னிடம் நெருக்கமாக இல்லை. நானும் கலராக இருந்து, நாலு வார்த்தை இங்கிலீஷ் பேசி இருந்தால் எல்லோருக்கும் நான் நண்பனாகி இருப்பேன் என்னை ஒதுக்கி விட்டார்கள் என் பாடலை கேட்பதற்காக மட்டுமே என்னை பயன்படுத்தினார்கள்.

- Advertisement -

இதுதான் உண்மை. சகஜமாக பேசுவதற்கு கூட யோசித்தார்கள். பிறகு நான் போய் அவர்களிடம் என்ன பேசுவது. உண்மையான எண்ணத்தை நான் வெளிப்படுத்தினேன். வேல்முருகன் யார் என்று வெளியே வந்து கேட்டால் அவர் அப்பாவி என்றுதான் சொல்வார்கள் அதைத்தாண்டி ரம்யா பாண்டியன் ஒரு டாஸ்கின் போது நான் பெண்களை பற்றி பேசினேன். அப்போது உங்களை நான் தப்பா புரிஞ்சுகிட்டேன் என்று சொன்னார். ஆனால் அதன் பின்னரும் அவர் என்னிடம் சரியாக பேசவில்லை. நான் பிக்பாஸில் நிறைய பேசி இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். பல இடங்களில் என் என் கருத்துக்களை நான் கூற தவறி விட்டேன் என்று இப்போது யோசிக்கிறேன்.

வீடியோவில் 8 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

இருப்பினும் தற்போது உள்ளே இருப்பவர்கள் அனைவரும் வெளியில் வந்தால் என்னிடம் பேசுவார்கள் ஆனால் இப்போது உள்ளே இருப்பவர்கள் வெளியில் வந்து பேசுவார்களா என்று கூட தெரியவில்லை அதேபோல நான் வெளியேறுவதாக கமல் சார் அறிவித்தவுடன் பாலாஜி ஓடிவந்து அஜித்தை தூக்கினார் மனதிற்குள் எவ்வளவு வைத்திருக்கிறார். அது அப்போது காட்டிவிட்டது. அவர் அப்படி செய்தது குறித்து எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆனால், அதுபற்றி கமன்ட் ஒன்றை படித்தேன். ஏண்டா எழவு வீட்ல போய் ஆழமா சிரிக்கிற மாதிரி இருக்கு என்று போட்டிருந்தார்கள். அதை பார்த்து நான் புரிந்து கொண்டேன் என்று கூறி உள்ளார் வேல் முருகன்.

-விளம்பரம்-
Advertisement