அவளுக்கு அது சுதம்மா இல்லடா, அத பத்தி எல்லாம் பேசுனது அவசியமா ? – ஜோவிகாவின் பேச்சால் புலம்பிய விசித்ரா

0
1390
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி நான்கு நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் கலந்துகொண்டு உள்ளனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான மற்றும் பரிட்சயம் இல்லாத பலர் கலந்துகொண்டு உள்ளனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் வனிதா மகள் ஜோவிகாவும் ஒருவர். போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் நாள் அன்றே இந்த நிகழ்ச்சிக்கு வந்தது குறித்தும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை குறித்தும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஜோவிகா, எனக்கு படிப்பு வராது. படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை. இதனால் நான் மன அழுத்தத்தில் இருந்தபோது என்னுடைய அம்மா வனிதா தான் நீ என்ன ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டார். நான் உடனே நடிகையாக என்று என்று சொன்னேன். பிறகு என் படிப்பை விட்டு நடிகையாக தேவையான கோர்ஸை எடுத்து படிக்க வைத்தார் என்று பேசிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி:

இதைக் கேட்டவுடன் பலருமே ஜோவிகாவிற்கு அறிவுரை கூற ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக யுகேந்திரன் வாசுதேவன், நீ பேசிக்ஸ் பன்னிரண்டாம் வகுப்பு வரை கண்டிப்பாக படித்து விட வேண்டும். அது ரொம்ப முக்கியம் என்று கூறினார். உடனே விசித்திரா, முக்கியம் நீ ஒரு டிகிரி ஆவது முடிக்க வேண்டும் என்று சொன்னார். இப்படி மாறி மாறி பலரும் ஜோவிகாவிற்கு அறிவுரையும், சிலர் ஆதரவாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் ஜோவிகா கண்டுகொள்ளாதது போல் தான் இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சிலர் தங்களுக்குள் மற்ற போட்டியாளர்களுடன் இருக்கும் மனஸ்தாபங்களை பேசி சரி செய்துகொள்ள முயன்றனர்.

ஜோவிகா- விசித்ரா சண்டை:

அப்போது ஜோவிகா, பிக் பாஸ் வந்த முதல் நாளே தன்னிடம் விசித்ரா படிப்பு பற்றி பேசியதை கூறி இருந்தார். பின்னர் இது பெரிய விவாதமாக மாற ‘நான் டாக்டரோ இஞ்சினியரோ ஆக சொல்லவில்லை. ஒரு +2 வாவது முடி என்று தான் சொன்னேன் என்றார். அதற்கு ஜோவிகாவோ, எனக்கு படிப்பு வரல அதனால எனக்கு ஒன்றும் தெரியாது என்று அர்த்தம் கிடையாது. எனக்கு எழுத படிக்க தெரியும் என்று சொன்னதும் எங்க தமிழ் எழுதி பார்ப்போம் என்று கூறினார்.

-விளம்பரம்-

ஜோவிகா கொடுத்த பதிலடி:

எல்லோரும் டாக்டர் படித்தால் கம்பவுண்டர் யார் ஆகுவது? படிக்க சொல்லி வற்புறுத்துவதால் தான் நீட் தேர்வினால் எத்தனையோ பேர் தற்கொலை செய்து இருக்கிறார்கள். படிப்பு இல்லாமலும் எத்தனையோ பேர் சாதித்து இருக்கிறார்கள். அதை சொல்லும் விதமாகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். என்னுடைய குடும்பத்தை பற்றி நீ பேசாதே. இங்கு நான் தான் விளையாட வந்திருக்கிறேன் என்று ஜோவிகா பேசி இருந்தார். இப்படி ஜோதிகா பேசுவதை கேட்டு விசித்திரா ரொம்பவே ஷாக் ஆகி விட்டார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஜோவிகா- விசித்ரா இடையே நடந்த சண்டைதான் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கின்றது.

ஜோவிகா குறித்து விசித்திரா சொன்னது:

இதற்கு சிலர் ஜோவிகாவிற்கு ஆதரவாகவும் சிலர் விசித்ராவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஜோவிகா பேசியது குறித்து இன்றைய நிகழ்ச்சியிலும் மனம் நொந்து போய் விசித்திரா பேசி இருக்கிறார். அதில் அவர், எதிலோ ஆரம்பித்து நீட்டில் சென்று முடிந்து இருக்கிறது. இதை வெளியில் தவறாக காண்பிக்க வாய்ப்பு இருக்கிறது. நீட்டை பற்றி அவள் பேச வேண்டிய அவசியமே இல்லை. இதுதான் அவளுடைய மெச்சூரிட்டி இல்லாத குணம் என்று பேசி இருக்கிறார். உடனே யுகேந்திரன், இந்த விஷயத்தில் அவளுக்கு மெச்சூரிட்டி இல்லை என்று சொல்ல முடியாது. இப்போதுள்ள குழந்தைகள் வளரும் போதே எல்லாம் தெரிந்துதான் வளர்கிறார்கள் என்கிறார். பின் விசித்ரா, அவள் அவளின் கேமை விளையாட நன்றாக கற்றுக்கொண்டாள் என்று கூறுகிறார்.

Advertisement