உண்மையான காதலுக்கு தகுதி இல்லாத ஆளு – தினேஷின் தனிப்பட்ட விஷயத்தை மோசமாக பேசிய விசித்ரா.

0
184
- Advertisement -

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி செல்வதால் அனல் பறந்து கொண்டு இருக்கிறது. மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் போட்டியாளர்கள் இரண்டு நபரை தேர்வு செய்து TTF போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் அனைவருமே சேர்ந்து அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் Ttf டாஸ்கின் முதல் டாஸ்க் துவங்கியது. இந்த டாஸ்க் துவங்கிய போதே விசித்ரா, மாயா, பூர்ணிமா, நிக்சன் ஒரு டீமாகவும் தினேஷ், விஷ்ணு, மணி, ரவீனா ஒரு டீமாகவும் தான் திட்டம் போட்டு விளையாடினர். இதில் முதல் சுற்றிலேயே தினேஷ் மற்றும் விசித்ரா வெளியேறினார்.

வழக்கம் போல் மாயா- பூர்ணிமா இருவருமே சேர்ந்து மற்ற போட்டியாளர்களை தீர்த்து கட்ட முடிவு பண்ணார்கள்.ஆனால், மணி- விஷ்ணு இருவரும் சேர்ந்து பூர்ணிமாவை காலி செய்து விட்டார்கள். அதிலும் டாஸ்கின் போது விஷ்ணு பூர்ணிமாவுடைய செங்கலை காலால் எட்டி உதைத்து தட்டி இருக்கிறார். இறுதியில் மணி- விஷ்ணு தான் வெற்றி பெற்றார்கள். பூர்ணிமா தோற்று விட்டார். இறுதியில் இந்த டாஸ்கில் விஷ்ணு வெற்றி பெற்றார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த டாஸ்கில் தோற்ற காண்டில் மாயா, பூர்ணிமா, நிக்சன்,விசித்ரா ஆகியோர் புலம்பிக்கொண்டு இருந்தார்கள். அப்போது தினேஷ் பற்றி பேசிய விசித்ரா ‘தினேஷ் என்னைப் பத்தி ரொம்ப மோசமா பேசிட்டே இருக்கார்’ என்று அவர் சொன்னது வரையில் ஓகே. ஆனால் அதையும் தாண்டி “அவருக்கு வாழ்க்கையில் பியூர் லவ் கிடைச்சே இருக்காது. கிடைச்சத திருப்பித் தரவும் தெரியாத ஆளு. அன்பிற்கு தகுதியான ஆளும் அவர் இல்ல. நான் பண்றதெல்லாம் நடிப்புன்றாரு.

எல்லாமே நடிப்பா” என்று தினேஷின் தனிப்பட்ட விவகாரத்தையொட்டி விசித்ரா பேசி இருந்தார். அதற்கு நிக்சன் கூட அப்படி எல்லாம் சொல்லாதீங்க, வெளியில் அவர் எப்படி இருப்பார் என்று நமக்கு தெரியாது என்று சொன்னார். ஆனால், விசித்ரா அப்போதும் தினேஷ் மீது வன்மத்தை கக்கினார். இந்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள் பலரும் விசித்ராவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே மாயா பூர்ணிமா கூட ரஷிதாவின் விஷயத்தை இழுத்து ஏதாவது தினேஷை செய்யலாம் என்று திட்டம் தீட்டியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதே போல ஆரம்பத்தில் விசித்ரா, மாயா மற்றும் பூர்ணிமாவிற்கு எதிராக தான் இருந்தார். அப்போது தினேஷ் – அர்ச்சனாவிற்கு தான் அடிக்கடி ஆதரவாக பேசி வந்தார். ஆனால், கடந்த சில வாரமாக தான் மாயா கேங்கில் சேர்ந்து இப்படி மோசமாக பேசி வருகிறார்.

Advertisement