. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார் பிரதீப் ஆண்டனி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் கவின் நடிப்பில் வெளியாகி இருந்த டாடா என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதற்கு முன்பும் இவர் ஆல்பம், நிகழ்ச்சிகள் என்று பங்கேற்று இருந்தார்.
இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது டாடா படம் தான். அதற்கு பின் இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார் .
இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருந்தது. அதில் ஒன்று தான் இரண்டு பிக் பாஸ் வீடு. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டை, சர்ச்சைகள் தொடங்கியிருந்தது. அனைவரும் எதிர்பார்த்தபடி இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். மேலும், இந்த சீசனில் சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் தான் பிரதீப் ஆண்டனி.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி:
இவர் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து சிறப்பாக தான் விளையாடி வந்தார். பின் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா மற்றும் அவருடைய கேங்க் பிரதீப் மீது குற்றம் சாட்டியதால் எந்த ஒரு விளக்கத்தையும் கேட்காமல் பிக் பாஸ் மற்றும் கமல் அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்பி இருந்தார்கள். பிரதிப்பை விட நிக்சன், மாயா, பூர்ணிமா ஆகிய பலருமே மோசமாக வீட்டிற்குள் நடந்து கொண்டிருக்கும்போது பிரதீப்பை எப்படி வெளியேற்றலாம் என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து இருந்தார்கள்.
நெட்டிசன்கள் கருத்து:
அதோடு இதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்கள் கமலை வறுத்து எடுத்திருந்தார்கள். மீண்டும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தும் பிரதீப் வரவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதோடு இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலுமே பிரதீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
விசித்திரா பேட்டி:
இந்த நிலையில் பிரதீப் ஆண்டனி குறித்து விசித்திரா அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், பெண்களுக்கு சேஃப்டி இல்லை என்று பிரதீப் ஆண்டனி மீது போடப்பட்டிருக்கும் பலி ரொம்ப தவறு. ரொம்ப பெரிய வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள். அப்படி எதுவும் அங்கு நடக்கவில்லை. நான் எதையும் அந்த மாதிரி உணரவில்லை. தேவையில்லாமல் அவருடைய பெயரை கெடுத்திருக்க வேண்டாம். அதேபோல் பிரதீப் சொன்னதில் ஒரு விஷயம் உண்மைதான்.
#BiggBossTamil7 #BiggBossTamil#BiggBossTamilSeson7#Vichitra speaking #Pradeep bathroom lock matter women safety uruttu
— Chubramani (@Harvester_green) January 29, 2024
Actually that bathroom doesn’t have lock at all
How can he lock the bathroom without lock at all 🤔
So the whole bathroom alligations is drama pic.twitter.com/eTQCdZEmzs
பிரதீப் குறித்து சொன்னது:
ஸ்மால் பிக் பாஸ் வீட்டில் பாத்ரூமிற்கு தாழ்ப்பாள் கிடையாது. நான் குளிக்கப் போகும்போது எல்லாரிடமும் சொல்லிவிட்டு யாரும் வந்து விடாதீர்கள் என்று தான் போவேன். இது குறித்து பிரதீப், பிக் பாஸ் வீட்டில் இது வேண்டும் என்று தான் செய்கிறார்கள். போட்டியாளர்கள் மத்தியில் சண்டை வரத்தான் இப்படி எல்லாம் இவர்கள் செய்கிறார்கள் என்று சொல்லுவான். பலமுறை பிக் பாஸிடம் தாழ்ப்பாள் போட சொல்லி கேட்டேன். அவர்கள் போடவே இல்லை என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் பிரதீப் பண்டனி வேணும் என்று பாத்ரூமை திறந்து வைத்து பயன்படுத்தவில்லை என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது.