உள்ளே சென்றும் மீண்டும் மாயாவிற்கு சொம்பு தூக்கிய விக்ரம் – கழுவி ஊற்றி அவரது தங்கை போட்ட பதிவு.

0
604
- Advertisement -

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் சரவணன் விக்ரம். இவர் சோசியல் மீடியாவில் ரீல்ஸ் வீடியோ மூலம் தான் அறியப்பட்டார். அதன் மூலம் தான் இவருக்கு சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் வெற்றியடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் கிடைத்த பிரபலத்தினால் தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 100 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்திரா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார். இன்னும் இந்த நிகழ்ச்சி சில நாட்கள் தான் இருக்கிறது. இதில் யார் டைட்டில் பட்டதை வெற்றி பெறுவார்கள்? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சியில் சரவணா விக்ரம்:

மேலும், இந்த நிகழ்ச்சியில் பரிச்சயமான நபர்களில் ஒருவர் சரவணா விக்ரம். இவர் நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து இறுதி வரை பெரிதாக எந்த ஒரு விஷயத்திலுமே ஈடுபாடுடன் செய்யவில்லை. மற்ற போட்டியாளர்கள் சண்டை விஷயத்திலுமே அதை கண்டு கொள்ளவும் இல்லை, தலையிடுவதும் இல்லை. அதோடு அடிக்கடி இவர், தன்னைத்தானே டைட்டில் வின்னர் என்றும் சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் ரசிகர்களுக்கு மத்தியில் கடுப்பை ஏற்றி இருந்தது.

-விளம்பரம்-

விக்ரம் தங்கை சொன்னது:

அதே போல மாயா மற்றும் பூர்ணிமாவுடன் இவர் சேர்ந்து அவர்களுக்கு ஜால்ரா அடித்ததும் ரசிகர்களுக்கு இவர் மீது கொஞ்சம் வெறுப்பை உண்டாக்கியது. கடந்த வாரம் Family சுற்று போது விக்ரமை பார்க்க அவரது தங்கை வந்து இருந்தார். அப்போது விக்ரமிடம் , பூர்ணிமாவை கூட ஏற்றுக்கொள்வேன். ஆனால், மாயாவை நான் ஏற்க மாட்டேன். உன்னிடம் நன்றாக பேசிவிட்டு உன் முதுகுக்கு பின்னாடி உன்னையே திட்டுகிறார்கள். யாரையும் நம்பாதே, யாருக்காகவும் விளையாடாதே என்றெல்லாம் அறிவுரை கூறி இருந்தார். அதே போல விக்ரம் குடும்பத்தினரும் மாயா மீது இருந்த வெறுப்பை அவர் மீது நேரடியாகவே காண்பித்து இருந்தார்.

வெளியேறிய விக்ரம்:

அதோடு அந்த வாரமே விக்ரம் வெளியேறினார். தற்போது மீண்டும் அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் இன்ஸ்டாவில் விக்ரமுடைய தங்கை பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர், உங்கள் சொந்த குடும்பத்தை விட மற்றவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் தவறான வழியில் செல்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement