அம்பேத்கரை தொடர்ந்து விக்ரமன் பேசிய ‘பெரியார்’ தத்துவமும் கட் – பிக் பாஸில் அடுத்த சர்ச்சை.

0
435
Periyar
- Advertisement -

கடந்த வரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் வாதியான விகாரம் பல விஷியங்களை கூறிவரும் நிலையில் கடந்த வாரம் அம்பேத்கர் குறித்து பேசிய கடிதமும், மலைவாழ் மக்களின் இடங்களை ஆக்கிரமிப்பு செய்யும் விஷியத்தை குறித்து அவர் வரைந்த ஓவியம் போன்றவை ஒரு மணிநேர நிகழ்ச்சியிலும், 24 மணிநேர நிகழ்ச்சியிலும் காட்டப்படாத நிலையில் தற்போது மீதும் விக்ரமன் பெரியார் குறித்து பேசும்போது அதையும் விஜய் டிவி முயூட் செய்து விட்டதாக சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிய நிலையில் விசிக கட்சித்தலைவரான திருமா விக்ரமன் செய்த செயலை பாராட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் விக்ரமன் :

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் விசிக கட்சியில் கொள்கை பரப்பு செயலாளரான விக்ரமன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடக்கத்தில் இவருக்கு அதிகமான ரசிகர் பட்டாளம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். டாஸ்க்கிலும் குறைவான பங்களிப்பே கொடுத்து வந்தார்.

- Advertisement -

குரல் கொடுக்கும் விக்ரமன் :

ஆனால் போக போக தான் எதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தாரோ அதை சரியாக செய்து கொண்டிருக்கிறார். மற்ற போட்டியாளர்களை போல செய்து நியத்திற்கு எதிராக யாராவது பேசினால் அவர்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார். அதே போல பெண்கள், திரு நங்கைகள், சாதி வெறி போன்றவற்றிக்கு வெளியில் குரல் கொடுத்த விக்ரமன் பிக் பாஸ் வந்த பிறகும் அந்த வேலையை சரியாக செய்து வருகிறார்.

விழிப்புணர்வு :

அந்த வகையில் ஒரு டாஸ்கில் விக்ரமன் துப்புரவு தொழிலாளிகள் படும் கஷ்டத்தை கூறும் வகையில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலையை எதிராகவும் பிரபலங்கள் டாக்கில் கூட தனக்கு அந்நியன் டாஸ்கில் தனக்கு இந்த படத்தின் மீது உடன்பாடில்லை. இது மற்ற மக்களை தவிர பிராமினர்கள் மட்டும் நல்லவர்கள் என்ற நோக்கில் படம் இருந்ததாக துணிச்சலாக பேசியிருந்தார்.

-விளம்பரம்-

அம்பேத்கருக்கு கடிதம்:

அதே போல காண காணும் காலங்கள் டாஸ்கிலும் விக்ரமன் சட்டமேதை அம்பேத்கர் அவர்களுக்கு கடிதம் ஓன்று அந்த டாஸ்கில் எழுதியிருந்தார். ஆனால் அதனை பிக் பாஸ் குழு 1 மணிநேர நிகழ்ச்சியில் இருந்தும் 24 மணிநேர நிகழ்ச்சியில் இருந்தும் நீக்கி விட்டது. ஆனால் ரசிகர்கள் விஜய் டிவிக்கு கொடுத்த நெருக்கடியால் அடுத்தநாள் விக்ரமன் பேசிய காட்டப்பட்டது. அதோடு கமல்ஹாசனும் காந்திக்கு கடிதம் எழுதி பேசியிருந்தார்.அப்போது அவர் கண்கலங்கினார்.

முயூட் செய்யப்பட்ட வார்த்தை:

இப்படிப்பட்ட நிலையில் நேற்று விக்ரமன் எடிகேவுடன பேசிக்கொண்டிருக்கும்போது. அவர் பிறர் சொல்வதை நம்பி அப்படியே செயல்படுவது குறித்து அதில் பேசியிருந்தார். அப்போது விக்ரமன் எடிகேவிடம் `நானே சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம். அது அவசியமும் இல்லை. நீங்கள் நான் சொன்னதை பகுத்தறிய வேண்டும் பின்னர் அது சரியா? தவறா? என்று நீங்களே உங்களை கேட்டு பாருங்கள் என்று பெரியாரின் கருத்துக்களை கூறிக்கொண்டிருக்க, அப்போது பெரியார் என்று விக்ரமன் கூறும் போது அதனை முயூட் செய்து விட்டதாக தற்போது அந்த விடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் பலரும் விஜய் டிவியை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement