விஷ்ணு- பூர்ணிமா இரண்டு பேருமே தப்பு பண்ணி இருக்காங்க மனம் திறந்த விஷ்ணுவுடன் நடித்த நடிகை

0
256
- Advertisement -

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 76 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள். குறிப்பாக, இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருக்கிறது. கடந்த சில வாரமாகவே பிக் பாஸ் வீடு அனல் பறந்து கொண்டு இருக்கிறது. மேலும், இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா, அர்ச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். பின் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் பிக் பாஸ், இரண்டு நபரை தேர்ந்தெடுத்து அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று சொன்னவுடன் எல்லாருமே அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

- Advertisement -

டான்ஸ் மாரத்தான் டாஸ்க்:

பின் நிகழ்ச்சியில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கதாபாத்திரமாகவே மாறி நடனமாடி இருக்கிறார்கள். இதற்கிடையில் யாரும் எதிர்ப்பாக்காத வகையில் முதல் மிட் வீக் எவிக்ஷனில்அனன்யா வெளியேறி இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பரிச்சயமான நபர்களில் விஷ்ணு ஒருவர். இவர் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே தெனாவட்டு ஆகவும், திமிராகவும் நடந்திருக்கிறார். குறிப்பாக, பிளேபாயாக மாறி இந்த போட்டியில் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கலாம் என்று நினைத்து இருக்கிறார்.

நடிகை சௌந்தர்யா பேட்டி:

அந்த வகையில் இவர் அதிகம் பெண் போட்டியாளர்களிடம் தான் சண்டை போட்டு இருக்கிறார். பின் பூர்ணிமாவுக்கு தன் மீது இருந்த ஈர்ப்பை புரிந்துகொண்டு அவரை வைத்து கேப்டனும் ஆனார் விஷ்ணு. மேலும் பிற போட்டியாளர்களிடம் பயங்கரமான வாக்குவாதத்தில் விஷ்ணு ஈடுபட்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் விஷ்ணு குறித்து அவருடைய தோழி சௌந்தர்யா கூறியது, விஷ்ணு ரொம்ப கோவப்படுவான். அவனுடைய கோபம் எக்ஸ்ட்ரீம் லெவலில் இருக்கும். அந்த ஒரு விஷயம் தான் அவனுடைய மைனஸ். பிக் பாஸ் ஒரு மணி நேர ஷோவை பார்த்துவிட்டு அவனை ஜட்ஜ் பண்ணாதீர்கள். 24 மணி நேரடி எபிசோடு பார்க்கிறவர்களுக்கு தான் அவன் ஜாலியான பர்சன் என்று தெரியும்.

-விளம்பரம்-

விஷ்ணு குறித்து சொன்னது:

உண்மையில் ரொம்ப ஜாலியா கேரிங்கா இருப்பான். அவன் நிறைய சீசன் பார்த்திருக்கிறான். ரொம்பவே தயாராகி தான் இந்த சீசனுக்கு போனான். அப்படி இருந்தும் அவன் இந்த அளவுக்கு ரியாக்ட் பண்றான், அழுகிறான் என்றால் அங்க இருக்குற சூழல்தான் ஒரு காரணம். ஒரே ஆளுங்க கூட இருக்கும்போது அவங்க நம்மள ட்ரிகர் பண்ணும் போது நம்மை அறியாமலேயே கோபம் வெளிப்படத்தான் செய்யும். நான் விஷ்ணுவைப் பற்றி போஸ்ட் போறதுக்கு முன்னாடி அவனை பற்றி நிறைய நெகட்டிவிட்டிருந்தது. அவன் பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் சண்டை போடறான், ஆண்கள் கிட்ட சண்டை போடுவதில்லை என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை.

விஷ்ணு லவ் குறித்து சொன்னது:

விஷ்ணு- பூர்ணிமா இரண்டு பேருமே தப்பு பண்ணி இருக்காங்க. ரெண்டு பேருமே பின்னாடி பேசி இருக்காங்க. பூர்ணிமா விஷ்ணு உடைய பாண்டிங் பார்க்க நல்லா இருக்கு. அவர்களுடைய ரொமான்ஸும் க்யூட்டா இருந்தது. அதுவே சண்டையின்னு வரும்போது பார்க்க நல்லா இருக்கு. மாயா ரொம்ப ஸ்ட்ராங்கான போட்டியாளர். விஷ்ணு கன்டண்டிற்கு லவ் பண்றேன் என்றெல்லாம் சொல்ல மாட்டான். அவனுக்கு பிடிக்கும் என்பதனால் மட்டும் தான் அது பாயிண்டுக்கே வருது. அவனுடைய கேப்டன் பதவியை அவன் சரியாக பயன்படுத்தவில்லை. கோபப்பட்டு எமோஷனல் ஆக்கிவிட்டான். ரொம்ப கூலா கேப்டன் ஆகா அவன் பொறுப்புகளை செய்திருக்கலாம். நார்மலாகவே விஷ்ணு எமோஷனல் பர்சன். இத்தனை நாள் இந்த வாய்ப்புக்காக போராடி போய் இருக்கான். அவனுடைய நம்பிக்கையை இழப்பதை பார்க்கும்போது அவன் மேல கோபம் வருகிறது என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement