‘நானும் உங்களைப் போன்று விபத்தில் சிக்கி 11 மாதங்கள் நொண்டிக் கொண்டு இருக்கிறேன்’ வேதனையை சொன்ன ரசிகருக்கு யாஷிகா கொடுத்த அறிவுரை

0
393
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தன் உடல் நலம் குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டது.

-விளம்பரம்-

அதே போல தன் உடல் நிலை குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் எலும்பு முறிவு. சர்ஜரிக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறேன். என்னால் அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான். இடம், வலம் கூட திரும்ப முடியாது. எனது முதுகு பலத்த காயமடைந்துள்ளது என்று கூறி இருந்தார்.

- Advertisement -

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள யாஷிகா கொஞ்சம் கொஞ்சமாக தேறி வரும் யாஷிகா அடிக்கடி தண்னுடைய உடல் நிலை குறித்து தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுவந்தார். சமீபத்தில் நடத்த ஒரு கடை நிகழ்ச்சிக்கு கையில் வால்கிங் ஸ்டிக்குடம் நடந்து வந்தார்.

yashika

இப்படி ஒரு நிலையில் யாஷிகா விற்கு ரசிகர் ஒருவர் அனுப்பிய மெசேஜ் ஒன்றில் ‘தனக்கும் கடந்த டிசம்பர் மாதம் விபத்து ஏற்பட்டு தொடை எலும்புகள் உடைந்து இருப்பதாகவும், 11 மாதங்கள் ஆகியும் இன்னமும் நொண்டிக் கொண்டு தான் இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். மேலும், உங்களின் வலி என்ன என்பது எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் மிகவும் வலிமையாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த யாஷிகா ‘ உங்களுக்கு என் அதிக அன்பை கொடுக்கிறேன். நானும் இன்னமும் நொண்டி கொண்டு தான் இருக்கிறேன் இதுவும் கடந்து போகும் மன வலிமையுடன் இருங்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement