3 வருடமாக தொடரும் கார் விபத்து வழக்கு – வாரண்டுக்கு பின் வழிக்கு வந்த யாஷிகா. நீதிமன்றம் அளித்துள்ள அடுத்த உத்தரவு.

0
115
- Advertisement -

கடந்த 2021 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கிய வழக்கால் யாஷிகா தற்போது வரை கோர்ட்டுக்கு அலைந்து கொண்டு இருக்கிறார். நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நீதி மன்றத்தில் நேரில் ஆஜரானார் யாஷிகா. தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர். இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான். இதனை தொடர்ந்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை போட்டு ட்ரெண்ட் ஆனார். பின் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி இருந்தார் யாஷிகா.

சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு இன்னமும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வரும் நிலையில் கடந்த ஆண்டு யாஷிகா விசாரணைக்கு தொடர்ந்து வரவில்லை என்று அவருக்கு பிடிவாதம் பிறப்பிக்கப்பட்டது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அவரது தளர்த்தப்பட்டது இதனை தொடர்ந்து யாஷிகா நீதிமன்றத்திற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.இப்படி ஒரு நிலையில் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு தற்போது செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

நேற்று எந்த வழக்கு விசாரணைக்கு வந்த யாஷிகா முகத்தில் மாஸ் அணிந்து கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு தன்னுடைய அடையாளங்களை மறைத்தவாறு ஆஜரானார். இதனைத் தொடர்ந்து வருகிற மே 3ஆம் தேதி இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த வழக்கை விரைவில் முடிப்பதற்காக யாஷிகா ஆனந்த் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வருவதாகவும் இந்த வழக்கில் எதிர் தரப்பில் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதால் இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Advertisement