சைஸ் என்ன? வயசுஎன்ன? முதல் சம்பளம் என்ன? ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த யாஷிகா.

0
4084
yashika
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர். இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான். பின் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் லைவ் சேட்டில் தோன்றி அடிக்கடி லைப் சாட்டில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் யாஷிகா ஆனந்த் லைவ் சேட்டில் வந்தபோது ரசிகர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள். அதில் ரசிகர் ஒருவர் உங்களுடைய சைஸ் என்ன என்று கேட்டதற்கு, ஏன் ஊரடங்கு முடிந்த பின்னர் எனக்கு துணிகளை பெற்றுத்தர திட்டமிட்டுள்ளார்களாம் என்ன என்று பதிலளித்துள்ளார்.

மற்றொருவர் உங்களின் வயது என்ன என்று கேட்டதற்கு 20 என்று பதிலளித்த யாஷிகா தன்னுடைய முதல் சம்பளம் 2 ஆயிரம் ரூபாய் என்றும் கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் படிப்பை முடிக்காமல் என் நடிப்பை தேர்ந்தெடுத்தீர்கள்? என்று ரசிகர் கேட்டதற்கு எதற்காக நாம் படிக்கிறோம். அறிவை வளர்த்துக் கொள்ளவும் பின்னர் ஒரு டிகிரியை முடித்துக் கொள்ளவும் தானே. அதன்பின்னர் நாம் இரத்தத்தை வேர்வையாக சிந்தி பணம் சம்பாதிக்க தானே படிக்கிறோம்.

-விளம்பரம்-

என்னை பொருத்தவரை வாய்ப்பு எந்த வழியில் வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு தற்போது சினிமாத்துறையில் நேரம் அமைந்து விட்டதை எண்ணி பெருமை அடைகிறேன். அதே போல சினிமாவில் இருக்கும் வரை என்னால் சிறந்தவற்றை கொடுப்பேன். அதன் பின்னர் தேவைபட்டால் படிப்பேன். அதே போல படிப்பிற்கு வயது தேவையில்லை. ஆனால், சினிமாவை பொருத்தவரை வாய்ப்புகளை நாம் கணிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே யார் செய்த ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது என்னவோ இருட்டு-அறையில்-முரட்டு-குத்து திரைப்படத்தின் மூலம் தான். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ஆனால், இந்த படத்தில் யாஷிகா நடிக்கவில்லை. இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, அந்த பட வாய்ப்பு எனக்கு வரவில்லை. ஆனால், நான் மற்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். இதனால் இருட்டு அறையில் முரட்டு குத்து பட வாய்ப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement