தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர். இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான். பின் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஜோம்பி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி இவர் தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் அப்டேட் செய்து கொண்டு இருப்பார். இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சி புகைப்படமாக தான் இருக்கும்.
அதே போல யாஷிகா மிகவும் ஜாலியான பேர் வழி தான். அடிக்கடி வெளிநாடுக்கு சுற்றுல்லா செல்லும் யாஷிகா, மலேஷியாவில் கவர்ச்சியான உடை அணிந்து ரோட்டில் சென்று கொண்டு இருக்கும் போது ரசிகர் ஒருவர் பின் தொடர்ந்து வீடியோ எடுத்து வந்தார். அது தெரிந்தும் யாஷிகா அந்த ரசிகருக்கு கையை தூக்கி அசைத்துவிட்டு புன்னகைத்து சென்றுவிட்டார்.