கை கூடாத இரண்டு காதல்கள், திடீரென்று தன் திருமணத்தை அறிவித்த யாஷிகா, மாப்பிளை யார் தெரியுமா ?

0
1055
yashika
- Advertisement -

நடிகை யாஷிகா திடீரென்று தன்னுடைய திருமண செய்தியை அறிவித்து இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் யாஷிகா அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தார். மேலும், யாஷிகா எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். சோசியல் மீடியாவில் ரசிகர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தும் தான் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும், கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டும் வந்தார்.

- Advertisement -

யாஷிகா விபத்து :

பின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அந்த விபத்தில் யாஷிகாவின் தோழி அநியாயமாக பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

விபத்தினால் ஏற்பட்ட விமர்சனங்கள் :

தற்போது உடல் நலம் தேறி வரும் யாஷிகா அடிக்கடி நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். பிக் பாஸ் சீசன் 5வில் கூட சிறப்பு விருந்தினராக சென்று இருந்தார் யாஷிகா. விபத்திற்கு பின்னர் யாஷிகா எந்த படத்திலும் நடிக்கவில்லை. விபத்திற்கு பின்னர் இவர் சமூக வலைதளத்தில் பல விதமான நெகட்டிவ் கமண்டுகளுக்கு உள்ளாகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் யாஷிகா தன்னுடைய திருமணம் குறித்து அறிவித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

திருமணத்தை அறிவித்த யாஷிகா :

இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ள யாஷிகா ‘நான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்னுடைய அப்பா அம்மா சம்மதித்து விட்டார்கள் நான் செட்டில் ஆவதற்கான நேரம் இது நான் சினிமாவை நேசிக்கிறேன் என்ன நடந்தாலும் நான் உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன். இது Arrange marriage தான். லவ்லாம் செட் ஆகாது. உங்களின் அனைவரின் ஆசிர்வாதங்களை வேண்டுகிறேன்.கெட்டிமேளம் மிக விரைவில்’ என்று பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

கை கூடாத காதல் :

யாஷிகா பிக் பாஸ் வீட்டில் இருந்த போது மஹத் மீது காதலில் விழுந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.ஆனால், ஏற்கனவே பிராச்சி என்பவரை மஹத் காதலித்து வந்ததால் யாஷிகாவின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே போல சீசன் 5 போட்டியாளரான நிரூப்பும் யாஷிகாவின் முன்னாள் காதலர் தான் என்பது கூறிப்பிடதக்கது. இப்படி இரண்டு காதலும் கைகூடாமல் போக தற்போது பெற்றோர்களால் பார்த்த மாப்பிள்ளைக்கே ஓகே சொல்லி இருக்கிறார் யாஷிகா.

Advertisement