கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா. தற்போது யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ என்ற படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கிறார் யாஷிகா
மேலும், அம்மணி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளம் ரசிகர்களை கைக்குள் வைத்துள்ளார். சொல்லப்போனால் இவரது கவர்ச்சிக்கென்று தனியாக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற கோவில் திருவிழா ஒன்றில் யாஷிகாவின் தீவிர ரசிகர்கள் சிலர் யாஷிகாவின் புகைப்படத்தை வைத்து பேனர் அமைத்துள்ளனர். மேலும், கரூர் யாஷிகா ரசிகர் மன்றம் என்று பெயரையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.