விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக இவர் நடித்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படம் இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
மேலும் இந்த படத்தில் கிடைத்த பிரபலத்தின் மூலமே இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பல ஆர்மிக்கள் கூட உருவானது. தற்போது அம்மணி கையில் அரை டஜன் பட வாய்ப்புகள் இருக்கிறது. யோகி பாபுவின் ஜாம்பி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் யாஷிகா.
சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவது வழக்கும். இந்த நிலையில் யாஷிகா உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்றை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.