பிக் பாஸ் அல்டிமேட்ல Wild Cardஆ கலந்துக்க கூப்பிட்டாங்க, ஆனா – லைவில் போட்டுடைத்த யாஷிகா. இதோ வீடியோ.

0
363
yashika
- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு வந்தும் அதில் கலந்துகொள்ள மறுத்துள்ளார் யாஷிகா. தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-200.jpg

இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான். பின் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.

- Advertisement -

யாஷிகா சந்தித்த கோர விபத்து :

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது.

பிக் பாஸ் 5க்கு வந்த யாஷிகா :

இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளார் யாஷிகா. மேலும், நீண்ட இடைவெளிக்கு பின்னர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 5வில் கூட சிறப்பு விருந்தினராக சென்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.

-விளம்பரம்-

வைல்ட் கார்டாக வந்துள்ள அழைப்பு :

இப்படி ஒரு நிலையில் தற்போது ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு வந்ததாக கூறி உள்ளார் யாஷிகா. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.

யாஷிகா கொடுத்த பதில் :

அப்போது பிக் பாஸ் அல்டிமேட்டில் வைல்ட் கார்டாக என்ட்ரி கொடுக்க திட்டம் இருக்கிறதா என்ற ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த யாஷிகா ‘ஆம், என்னை பிக் பாஸ் அல்டிமெட்டில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது. ஆனால், என்னால் பழையபடி டாஸ்க் பண்ண முடியாது. மேலும், நான் 18 வயசு இருக்கும் போது பிக் பாஸுக்கு போனேன். அந்த ஒரு கேப்பும் இருக்கு. நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. மேலும், இனியும் நான் எந்த லவ் ஸ்டோரியிலும் இருக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். ‘

Advertisement