எல்லோருமே என்னுடைய வாழ்க்கை குறித்து கருத்துசொல்றாங்க, ஆனா – ரக்ஷிதா போட்ட பதிவு.

0
285
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 91 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி ஆனவர் தினேஷ். இவர் நிகழ்ச்சியில் நுழைந்ததிலிருந்து இவருக்கும் விசித்ராவிற்கும் செட்டே ஆகவில்லை. இருவருமே ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

விசித்திரா செய்த வேலை:

குறிப்பாக, மற்ற போட்டியாளர்கள் விசித்திராவிடம் சண்டை போட்டாலும் இதற்கு தினேஷ் தான் தூண்டி விடுகிறார் என்றெல்லாம் விசித்ரா கூறுகிறார். அந்த வகையில் இந்த வாரம் ரவீனா, விசித்ராவை பாத்திரம் விளக்குவதற்கு அழைத்தபோது தினேஷ் தான் அவரை தூண்டிவிட்டு செய்கிறார் என்ற கடுப்பில் விசித்ரா கேமரா முன் நின்று, இவர் எல்லாம் மனிதரே கிடையாது. இப்படி இருந்தால் இவருடன் யார் குடும்பம் நடத்துவார்கள்? ஏம்மா ரக்ஷிதா நீ திரும்பி ஏதும் வந்து விடாதே.

நெட்டிசன்கள் விமர்சனம்:

இவனுடலாம் வாழ முடியாது என்றெல்லாம் பயங்கரமாக பேசியிருந்தார். இது மிகப் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இதற்கு நேற்றைய எபிசோடில் கமல் கடுமையாக கண்டித்தும் இருந்தார். விசித்ராவின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்று இருக்கிறது. அதோடு பலரும் இது குறித்து விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலையில் ரக்ஷிதா சோசியல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பது, நான் வாழ்க்கையில் மிகப் பெரிய பாடம் ஒன்றை கற்றுக் கொண்டேன்.

-விளம்பரம்-

ரக்ஷிதா பதிவு:

நீங்கள் தனியாக இருந்தால் கூட சரியானதற்காக மட்டும் உறுதியாக நில்லுங்கள். உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும். அதற்காக அது உண்மை இல்லை என்று ஆகாது. எல்லோருமே என்னுடைய வாழ்க்கை குறித்து கருத்து சொல்கிறார்கள். ஆனால், யாரும் என்னுடைய வாழ்க்கை வந்து வாழ முடியாது. இது என்னுடைய தனிப்பட்ட போராட்டம். தனியாக போராட விடுங்கள். எல்லோரும் உங்கள் வேலையை பாருங்கள். எங்களை எங்கள் வேலையை பார்க்க விடுங்கள். ஹாப்பி நியூ இயர், அன்பே சிவம் என்று கூறி இருக்கிறார்.

ரக்ஷிதா-தினேஷ் பிரிவு:

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்கள் ரக்ஷிதா- தினேஷ். இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை ஒரு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இவர்கள் இருவரும் சட்டபூர்வமாக பிரியவில்லை. சில மாதங்களாக இவர்களின் பஞ்சாயத்து தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள்.

Advertisement