ரெட் கார்டு மட்டுமல்ல ‘பாலாஜிக்கு’ இதையும் பண்ணுங்க – கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.

0
6114
balaji
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 13 வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இதுவரை இந்த சீசனில் 10 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இன்னும் 8 பேர் உள்ளே இருக்கின்றனர். இன்னும் ஒரு இரண்டு வாரத்தில் இந்த சீசனே நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த சீசனில் வெற்றிய பெற போட்டியாளர்கள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். அதிலும் பாலா தான் வெற்றி பெறுவதை விட ஆரி வெற்றி பெற கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.இந்த சீசன் கொஞ்சம் சுவாரசியமான சென்றத்துக்கும் முக்கிய காரணம் ஆரி மற்றும் பாலாஜியின் சண்டைகள் தான் என்பது மறுக்க முடியாத ஒன்று.

-விளம்பரம்-

ஆனால், கடந்த சில தினங்களாக இவர்கள் இருவரும் பழசை எல்லாம் மறந்து ஏதோ அண்ணன் தம்பி போல மிகவும் பாசமாக பழகி வருகின்றனர். ஆனால், அவ்வப்போது ஆரியை பற்றி பாலாஜி மற்றவர்களிடம் புறம் பேசிக்கொண்டு தான் வருகிறார். ஆரம்பத்தில் ஆக்ரோஷ மனிதராக இருந்த பாலா, கடந்த சில வாரங்களாக அமைதியாக மாறிவிட்டார். ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் மீண்டும் பாலா தனது பழைய ஆக்ரோஷ குணத்தை ஆரியிடம் வெளிப்படுத்தினார். வாரம் முழுவதும் சுவாரஸ்யம் குறைவாக இருந்த இருவரை நாமினேட் செய்யுமாறு பிக்பாஸ் கூற, ஆரி எழுந்து பாலாஜி பெயரை சொன்னார்.

- Advertisement -

அவர் அதற்கான காரணங்களை சொல்லும்போதே பாலாஜி இடையில் பேச, அங்கேயே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு விட்டது. பின்னர் இருவரும் சுவாரசியம் குறைவான போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் இருவரும் கண்ணாடி அறைக்குள் அனுப்பப்பட்டனர். கண்ணாடி அறைக்கு சென்ற பின்னர் இடையில் வாக்குவாதம் நிகழ, ஆரி ஒரு கட்டத்தில் பாலாஜியை சோம்பேறி என்று கூற டென்சன் ஆன பாலாஜி கத்தி கூப்பாடு போட்டார். இன்னும் ஒரு முறை என்னை சோம்பேறி என்று சொன்ன அவ்ளோ தான் நீ என்று ஆரியை எச்சரித்த பாலாஜி முருகதாஸ் கண்டபடி ஆரியை திட்டித்தீர்த்து மைக்கையும் கழட்டி உடைத்து விட்டார்.

இதைப்பார்த்த பொதுவான ரசிகர்களும் கூட பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், பாலாஜி உள்ளே சண்டை போட்ட போது ஆரி, தான் சோம்பேறி என்று சொன்னதை வாப்பஸ் வாங்கிகொள்கிறேன் மன்னிச்சிரு என்று சொன்னார். ஆனால், வெளியில் வந்த பாலாஜி, ஆரியை என்னிடம் நீங்க மன்னிப்பு கேக்கவே இல்லை இப்போ மன்னிப்பு கேளுங்க இல்லன்னா அவ்ளோதா என்று மிரட்டும் தொனியில் சொன்னார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பாலாஜியின் இந்த ஆக்ரோஷமான செயலை கண்டித்து சமூக வலைதளத்தில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ,மேலும், பாலாஜிக்கு ரெட் கார்ட் கொடுத்து அனுபவத்தோடு மட்டுமல்லாமல் அவருக்கு இந்த வாரம் குறும்படமும் போட வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதே போல பொதுவாக மைக்கை கழட்டினாலே விதி மீறல் என்று இருக்கும் போது பாலாஜி மைக்கை தூக்கி போட்டு உடைத்தது விதி மீறல் என்றும் இதனை கமல் கண்டிப்பாக இந்த வாரம் கேட்டு பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement