சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் பவித்ரா ஜனனி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றியடைந்த சரவணன் மீனாட்சி 2 என்ற சீரியலின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இதை அடுத்து இவர் ராஜா ராணி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதற்கு பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ஈரமான ரோஜாவே சீரியலில் ஹீரோயினியாக நடித்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
இந்த சீரியலின் வெற்றியால் இவர் தென்றல் வந்து என்னை தொடும் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்கள் நடந்து வெற்றிகரமாக கடந்த மாதம் தான் முடிந்தது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி இருந்தது.
பிக் பாஸ் 8:
இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். மேலும், அனைவரும் எதிர்பார்த்தபடி முத்துக்குமரன் தான் டைட்டில் பட்டதை வென்று கோப்பையை வாங்கி இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பவித்ரா:
இவரை அடுத்து இரண்டாம் இடத்தை சௌந்தர்யா, மூன்றாம் இடத்தை விஷால், நான்காம் இடத்தை பவித்ரா, ஐந்தாம் இடத்தை ராயன் வென்று இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் பவித்ரா சிறப்பாக விளையாடியிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ஆர்மி உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பவித்ரா தன்னுடைய நண்பர் ரயானுடன் சேர்ந்து பருவத மலைக்கு சென்றிருந்தார். அங்கு எடுத்த புகைப்படத்தை எல்லாம் சோசியல் மீடியாவில் போட்டிருந்தார். இதற்கு பலருமே நெகட்டிவான கமெண்ட் எல்லாம் போட்டு இருந்தார். இருவரையும் விமர்சித்தெல்லாம் பேசியிருந்தார்கள்.
பவித்ரா பதிவு:
இப்படி இருக்கும் நிலையில் இது குறித்து வேதனையில் பவித்ரா பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், வணக்கம். அனைவரும் நலம் என்று நம்புகிறேன். சில விஷயங்களை தெளிவாக விவரிக்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் அதனை புரிந்து கொண்டு நடப்பீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, நண்பர்கள், அவர்களுடன் பயணம் செல்வது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். சூழ்நிலை புரிந்து கொள்ளாமல் ஒரு சிலர் என்னை பற்றி தவறான கருத்துக்களை பதிவிடுவது எனக்கு ரொம்ப வேதனை அளிக்கிறது.
பவித்ரா சொன்ன விஷயம்:
விரும்பத்தகாத வகையில் வேறொருவரையோ அல்லது வேறொரு ஃபேன் பேஜையோ குறிப்பிட்டு பதிவிடும் கமெண்ட்களை எல்லாம் என் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டேன். நீங்கள் சில ஜோடிகளை பிக் பாஸ் வீட்டில் ரசித்திருக்கலாம். ஆனால், அதையும் தாண்டி அனைவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. அது எதார்த்தத்தில் இருந்து பயங்கர வித்தியாசமானவை. எங்கள் பரஸ்பர ரசிகர் பக்கங்கள் அனைத்தும் இதையே மதிக்கின்றது என்று நான் உண்மையாக நம்புகிறேன். எனக்கான இடத்தை எனக்கு கொடுங்கள் என்று கூறியிருக்கிறார்.