அது நடந்து இருந்தா விஜயகாந்த் முதலமைச்சர் ஆகி இருக்கா மாட்டாரா – விஜய் அரசியல் என்ட்ரி குறித்து கஸ்தூரி.

0
497
- Advertisement -

விஜய் இவர்களுடன் தான் கூட்டணி வைக்க போகிறார் என்று நடிகை கஸ்தூரி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் விஜயின் அரசியல் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். இவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்கள். அதனின் முக்கிய படியாக தான் கட்சி தொண்டர்களாக மாற்றி இருக்கிறார் என்றும் கட்சி வேலைகளும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் விஜய் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருந்தார்.

- Advertisement -

விஜய் அரசியல்:

இதன் மூலம் விஜய் அரசியல் வருவதற்கு அடுத்த கட்டமாக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று பலரும் கூறுகின்றனர். அதோடு விஜய் விரைவிலேயே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் தன்னுடைய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதனை அடுத்து விஜய் தன்னுடைய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

விஜய் கட்சி குறித்த தகவல்:

அதோடு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார். இப்படி முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகிறது. தற்போது விஜய் அரசியலுக்கு வருவது உறுதியானதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜயின் அரசியல் குறித்து நடிகை கஸ்தூரி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

கஸ்தூரி பேட்டி:

பேட்டியில் கஸ்தூரி, தமிழக வெற்றி கழகத்தில் ‘க்’ இருந்தாலும் இல்லையென்றாலும் வெற்றியை சரியா பிளேஸ் பண்ணிவிட்டார் விஜய். என்னை போல் சினிமாவில் ரசிகர்களாக இருப்பவர்கள், ரசிகர்கள் என எல்லோருமே ஒட்டுமொத்தமாக ஓட்டு போட்டு இருந்தால் விஜயகாந்த் எப்பவோ முதலமைச்சராகி இருப்பார். கமல் எம்.எல்.ஏ ஆகி இருப்பார். இதெல்லாம் நடக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் அத்தனை பிரச்சினைகள் இருக்கிறது. மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு 10 ஆயிரம் ரூபாய் பிரச்சனைக்கு தலையில் வைத்துக்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய் அரசியல் குறித்து சொன்னது:

யாரை கொண்டு வரலாம் என்றும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது விஜய் எந்த இடத்தில் இருக்கிறார். அதில் அவரே இன்னும் பிட்டாகவில்லை. எனக்கு தெரிந்த பாதிப்பு இல்லாத ஒரே கட்சி பாஜக தான். காவி கொள்கைகள் கொண்டவர்கள் எல்லோருமே பாஜகவிற்கு தான் ஓட்டு போடுவார்கள். மைனாரிட்டிஸ் எல்லோரும் திமுக, காங்கிரசுக்கு போடுவார்கள். இதில் விஜய் காங்கிரஸ் உடன் தான் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது. அவங்க தான் சமூக நீதி கூட்டணி. விஜய்யின் வழியில் வருபவர்கள் குறைவு. இதை நான் தவறு என்று சொல்லவில்லை. இதுதான் உண்மை என்று கூறியிருக்கிறார்.

Advertisement