வனிதா விஜயகுமார் புதியதாக தொடங்க இருக்கும் பிஸினஸ் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா இவர்களின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் வனிதா.
பின் மூன்று பிள்ளைகளுக்கு தாயானார் வனிதா. இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனித்தனியாக வசித்து வருகிறார் வனிதா. பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
வனிதாவின் மூன்றாவது திருமணம்:
அதுமட்டுமில்லாமல் இவருக்கு என்று ரசிகர்களும் கிடைத்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். இருந்தும் இவரைக் குறித்து பல சர்ச்சைகள் சோஷியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன. அதோடு இவரை பலரும் வத்திக்குச்சி வனிதா என்று தான் அலைகிறார்கள். பின் கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர் பால் என்பவரை வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
வனிதா நடிக்கும் படங்கள்:
ஆனால், இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்தது. அதற்குப் பிறகு வனிதா தொடர்ந்து பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் காத்து என்ற படத்திற்கு நடனம் ஆடி இருக்கிறார். இந்த படத்தை தவசிராஜன் இயக்கி தயாரித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகை வனிதா அவர்கள் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா:
அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டு இருந்தார். மேலும், கமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து வனிதா அவர்கள் தாமாகவே வெளியேறினார். மன அழுத்தத்தின் காரணமாகவும், உடல் நிலை கருதியும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வனிதா வெளியேறியதாக கூறப்பட்டது. மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றியம் கடந்த ஆண்டு தொடங்கினார்.
வனிதா செய்யும் புது பிசினஸ்:
இப்படி வனிதா அவர்கள் நடிப்பை தவிர பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது ஃபேஷன் டிசைனராகவும் வனிதா அவதாரம் எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில் வனிதா அவர்கள் தான் சிகை அலங்காரம் செய்த பெண்ணுடன் ஒய்யாரமாக நடை போட்டிருக்கிறார். அதோடு அந்த விழாவில் தன்னுடைய புது பிஸினஸை குறித்தும், விரைவில் அந்த பிராண்டை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார். தற்போது அதற்கான வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த பலரும் வனிதாவை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.