குடிப்பழக்கத்தால் அழிந்த வாழ்க்கை, ஒரு காலத்தில் ட்ரெண்டிங்காக இருந்த பிஜிலி ரமேஷின் தற்போதய பரிதாப நிலை.

0
233
- Advertisement -

முன்பெல்லாம் ஒருவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறுவதற்காக ஒவ்வொரு இயக்குனர்களையும் சந்தித்து வாய்ப்பு கேட்டு சினிமாவில் இருக்கும் ஒவ்வொருத்தரையும் சந்திக்க வேண்டும். இது போன்று பல கஷ்டங்களை கடந்து வந்து தான் சினிமாவில் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது நடிப்பு திறமைகளை வீடியோவ வெளியிட்டு, தங்கள் நடிப்புகளைவெளியிட்டும், காமெடியாக செய்து போடும் வீடியோக்கள் இவைகள் எல்லாம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக ஆக்கி விடுகின்றனர்.

-விளம்பரம்-

இப்படி சமூக வலைதளங்களை மூலம் ட்ரெண்டிங் ஆன ஒரு காமெடியன் தான் பிஜிலி ரமேஷ். தனது சொந்த வேலை ஒன்றை முடித்துவிட்டு சிவனேன்னு வீடு திரும்பிக் கொண்டிருந்தவரை தூக்கி லாக் பண்ணி, ஃபன் பண்ணுவதாகப் படுத்தி எடுக்க மிகப் பிரபலமானவர். . இப்படி பிரபலமான மான பிஜிலி ரமேஷ் இவரை பல்வேறு தனியார் ஊடகங்களும் சமூகவளைதள சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு இவரை பேட்டி எடுத்தனர்.

- Advertisement -

ஆனால் அப்போது அவருக்கு தெரியாது நம் சினிமாவில் நடிக்கப் போகிறோம் என்று அதே போல இவருக்கு முதன் முதலில் சினிமா வாய்ப்பு கொடுத்தது நெல்சன் தான். நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” என்ற படத்தில் கபீஸ்க்குபா என்ற பாடலில் இடம்பெற்று அசத்தி இருந்தார் பிஜிலி.இதை தொடர்ந்து இவருக்கு பல படங்களின் வாய்ப்புகள் வந்தது. ஆனால், சமீப காலமாக இவர் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை.

இப்படி ஒரு நிலையில் கடந்த மாதங்களுக்கு முன்னர் பிஜிலி ரமேஷ் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார். மேலும், தற்போது தனக்கு சினிமா வாய்ப்புகள் இல்லை என்றும் குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டு வருவதாவும் கண்ணீருடன் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது கொஞ்சம் உடல் நலம் தேறி வந்துள்ள பிஜிலி ரமேஷ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

-விளம்பரம்-

அதில் பேசியுள்ள அவர், சினிமாவில் நான் எதோ லட்ச கணக்கில் சம்பாதித்து அதை சேர்த்து வைக்காமல் குடித்தே அழித்துவிட்டதாக கூறுகின்றனர். நான் அவ்வளவு எல்லாம் சம்பாதிக்கவில்லை. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துல 13ஆயிரம் வாங்குனேன், குக்கு வித் கோமாளில 15ஆயிரம் வாங்கினேன். கோலமாவு கோகிலா படத்திற்கு ப்ரோமோ கொடுத்தேன் அதில் தான் அதிகபட்சமாக 20ஆயிரம் வாங்கினேன்.

மீது படத்துல எல்லாம் 3ஆயிரம், 5ஆயிரம் தான் வாங்கினேன். அதுகூட ஒரு ரெண்டு நாள் தான் போவேன் ஒரு 6 ஆயிரம் கிடைக்கும் இதை வைத்து நான் என்ன சேர்த்து வைக்க முடியும். இன்னிக்கி இருக்க விலை வாசில ஒரு மார்க்கெட் போனாலே 5ஆயிரம் போயிடுது. நான் என்ன எப்பயோ சம்பாதிச்சத வச்சி இப்பவும் பேசினா நான் என்ன பண்றது. நான் என்ன லட்ச கணக்குலயா சம்பாதிச்சிட்டேன் நான் சேர்த்து வைக்க’ என்று பேசி இருக்கிறார்.

Advertisement