‘அஜித் சாரை மட்டும் இப்போ நேரில் பார்த்தே’ – பில்லா 2 நடிகர் தீப்பெட்டி கணேசன் பேட்டி.

0
2671
- Advertisement -

தமிழ் சினிமா உலகிற்கு ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தீப்பெட்டி கணேசன். இவரது இயற்பெயர் கார்த்திக். தீப்பெட்டி கணேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் இவரை அனைவரும் தீப்பெட்டி கணேசன் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா செய்யும் பணியில் சேர்ந்தார். பின் இவர் உடலில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இவர் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட பிழைப்பிற்கு தவித்து வருகிறார்.

-விளம்பரம்-

தீப்பெட்டி கணேசனுக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து வறுமையில் வாடி வரும் தீப்பெட்டி கணேசனுக்கு தற்போது கொரோனா லாக்டவுனில் எந்த வித வருமானமும் இல்லாததால் ஒரு வேளை உணவிற்கு மொத்த குடும்பமும் தவித்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகர் விஷால் அவர்கள் ஒரு மாதத்திற்கான மளிகை சாமான் அனுப்பிவைத்து இருந்தார். அதற்க்கு நன்றி கூறி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தீப்பெட்டி கணேசன் தல அஜித்திடம் உதவி கேட்டு நெஞ்சை உருக்கும் அளவிற்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார் அதில் அவர் கூறியிருப்பது, அஜித்தை சந்திக்க பல முறை முயற்சி செய்தேன். ஆனால், அவரை சுற்றி இருப்பவர்கள் என்ன விடவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் தீப்பெட்டி கணேசன் என்று தான் கூப்பிடுவார்கள். நான் எவ்வளவோ படங்கள் நடித்து விட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் கார்த்திக் என என் பெயரை கூப்பிட்ட ஒரே கடவுள் அஜித் சார் மட்டும் தான்.

படப்பிடிப்பின் போது செருப்பு போடாமல் நடக்க சொல்லி இருந்தார்கள். அப்போது நான் அங்கு முள்ளு இருந்ததை கவனிக்காமல் நடந்து விட்டேன். அந்த முட்கள் காலில் நிறைய குத்திவிட்டது. நான் டிடி(TT) மருந்து போட்டிருந்தால் பிரச்சினையே எழுந்திருக்காது. நான் போடாததால் என் கால் முழுவதும் செயலிழந்து ரத்த ஓட்டம் போகாமல் முட்டி வழியும் கருப்பாகி விட்டு நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

-விளம்பரம்-

தனக்கு உதவி செய்யுமாறும் இந்த செய்தியை எப்படியாவது அஜித் சாரிடம் சேர்த்து விடுங்கள் என்றும் கூறியிருந்தார். இந்த வீடியோவை ட்விட்டார் வாசி ஒருவர் பகிர இதற்கு பதில் அளித்துள்ள லாரன்ஸ் இந்த வீடியோவை அஜித் சாரின் மேனேஜருக்கு பகிர்கிறேன் என்று கூறி இருந்தார். தீப்பெட்டி கணேசனின் நிலையை அறிந்து பலரும் உதவி செய்து தற்போது அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள தீப்பெட்டி கணேசன் பேசுகையில், எனக்கு உதவி செய்த அனைவரும் நன்றி, அஜித் சாரிடம் இந்த விஷயத்தை லாரன்ஸ் சார் சொல்லி இருப்பதாக சொன்னார். அஜித் சாரும் கண்டிப்பாக பார்க்கிறேன் என்று சொல்லி இருக்கார். அஜித் சார் மட்டும் நேரில் வந்தால் நான் எந்திரிச்சி ஓடிடுவேன் என்று கூறியுள்ளார் தீப்பெட்டி கணேசன்.

Advertisement