பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை சினிமாவில் களம் இறங்கியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தற்போது தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை குப்புசாமி. இவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். அதோடு இவர் விவசாய குடும்பத்தை சேந்தவர். இவர் அரசியல்வாதி தாண்டி காவல்துறை அதிகாரியும் ஆவார். இவர் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு எழுதி பல நேர்காணலை சந்தித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி இருந்தார்.
அதுமட்டும் இல்லாமல் பல மாவட்டங்கள், மாநிலங்களில் காவல் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். பின் விருப்ப ஓய்வு பெற்று இவர் அரசியலில் குதித்து இருக்கிறார். மேலும், இவர் 2001 ஆம் ஆண்டு பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் தமிழக பாஜக தலைவராக இருக்கிறார். கர்நாடக சிங்கம் என்று தான் இவரை பலரும் அழைக்கிறார்கள். இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. தற்போது இவர் அரசியல்வாதியாக இருந்தாலும் மிக திறமையான அதிகாரியும் ஆவார்.
அண்ணாமலை குறித்த தகவல்:
இவர் அரசியலில் நுழைந்தலில் இருந்தே இவருடைய பேச்சுகளும், கருத்துக்களும் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு அண்ணாமலை பா ஜ கவில் சேர்ந்த நாள் முதலே அவரை பல எதிர் கட்சிகள் விமர்சனம் செய்து இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி அண்ணாமலையும் ஏதாவது ஒரு கேலிக்கு உள்ளாகிவிடுகிறார். இவர் எது ஒன்று பேசினாலும் அதை கொளுத்தி விடுவதற்கு என்று ஒரு கும்பல் இருக்கிறார்கள்.
அண்ணாமலை குறித்த சர்ச்சை:
அந்த வகையில் கலைஞர் கருணாநிதி பற்றியும், மு க ஸ்டாலின் குறித்தும் அண்ணாமலைப் பேசிய கருத்து சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் அண்ணாமலையை பா ஜ கவை சேர்ந்த சிலர் கூட ட்ரோல் செய்து இருந்தார்கள். இருந்தாலும், இவர் மனம் தளராமல் கடுமையாக போராடி வருகிறார். இந்த நிலையில் இவர் சினிமாவில் களம் இறங்கி இருக்கிற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அண்ணாமலை நடிக்கும் படம்:
சமீபகாலமாகவே அரசியல் வாரிசுகள், அரசியல் பிரமுகர்கள் சினிமாவில் களம் இறங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே சினிமாவில் உதயநிதி ஸ்டாலின் கொடிகட்டி பறந்து வருகிறார். அவரை தொடர்ந்து பல அரசியல் வாரிசுகள் படங்களில் நடிக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை இணைந்திருக்கிறார். தற்போது அண்ணாமலை அவர்கள் அரபி என்ற கன்னட மொழி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இரண்டு கைகளும் இல்லாமல் சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை புரிந்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
அண்ணாமலை வாங்கிய சம்பளம்:
இதில் விஸ்வாசி நீச்சல் வீரராக நடிக்கிறார். அவருக்கு பயிற்சியாளராக அண்ணாமலை நடித்திருக்கிறார். இந்த கதையை கேட்டதும் அண்ணாமலை ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்று நடித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இவரும் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு உள்ளது. தற்போது அதற்கான போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.