ஸ்டாலின் பேரனை வச்சி ரொனால்டோ மெஸ்ஸிக்கு சவால் விடுறாங்க – கேலி செய்த BJP பிரபலம்.

0
1408
inban
- Advertisement -

நடிகர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி பீச்சில் கால்பந்து விளையாடும் புகைப்படம் ஒன்று சமுக வலைதளத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து இதற்கு பலரும் பல விதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ஒரே சமயத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகலாக இருந்து வருகிறார. குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

நான்கு படங்களை தயாரித்த பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார் உதயநிதி ஸ்டாலின். தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார் உதயநிதி. ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பின்னர் ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க மிகவும் தடுமாறினார் உதயநிதி ஸ்டாலின். இடையில் இவரது நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

- Advertisement -

அதேபோல கண்ணேகலைமானே சைக்கோ போன்ற படங்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல வெற்றியை கொடுத்திருந்தது. உதயநிதி ஸ்டாலின் கடந்த 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிருத்திகா மற்றும் உதயநிதி ஸ்டாலின்னுக்கு இன்பநிதி என்ற மகனும் தமன்யா என்ற மகளும் உள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று தற்போது அந்த தொகுதியில் எண்ணெற்ற நலத்திட்டங்களை செய்து அசத்தி வருகிறார். அவரது மகனோ ஸ்போர்ட்ஸ்ஸில் அசத்தி வருகிறார். உதயநிதியின் மகன், ஒரு கால்பந்து வீரர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association (Neroca)) என்ற கால்பந்து அணிக்குத் தமிழகத்திலிருந்து உதயநிதியின் மகன் தேர்வாகி இருந்தார்.

-விளம்பரம்-

இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இது குறித்து பேசிய இன்பன் உதயநிதி என்னுடைய இந்த முடிவிற்கு என்னுடைய குடும்பத்திலிருந்து மிகப் பெரிய ஆதரவு கிடைத்தது. இந்த தேர்வு என்னுடைய தன்னம்பிக்கையை உயர்த்தி இருக்கிறது. என்னுடைய கால்பந்து விளையாட்டு கனவு குறித்து என்னுடைய தாத்தாவிடம் நான் பேசவில்லை. அவருக்கு இருக்கும் வேலை பளுவால் வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே நாங்கள் சந்திக்கிறோம் என்று கூறியிருந்தார்.

நெரோகா எஃப்சி கிளப்பில் தேர்வான இன்பன் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பீச்சில் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படம் ஒன்று சமுக வலைதளத்தில் வைரலானது. இதை பகிர்ந்த ஒரு மீடியா சேனல், அன்புள்ள ரொனால்டோம் மெஸ்ஸி – இன்பன் வந்துகொண்டு இருக்கின்றான் என்று பதிவிட்டு இருந்தனர்.

இந்த பதிவை கண்ட பலர் பல விதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் BJP கட்சியை சேர்ந்த எஸ் ஜி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது , தமிழ் யூட்டுப் சேனல், கால்பந்தில் வர இருக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் பேரன் இன்பநிதியை வைத்து ரொனால்டோ, மெஸ்சிக்கு சவால் விடுகிறது. பயங்கரமான பத்திரிகை என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement