படத்தில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ – பிளாக் பாண்டியின் யாருமறியா மற்றொரு முகம் – இதோ வீடியோ.

0
482
blackpandi
- Advertisement -

யாருக்கும் தெரியாமல் விளம்பரம் இல்லாமல் நடிகர் பிளாக் பாண்டி செய்யும் நற்பணி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் 2010 ஆம் பத்தாம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் அங்காடித் தெரு. இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிளாக் பாண்டி. ஆனால், இவர் இதற்கு முன்பு பல படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவருடைய திறமையை வெளிக்கொண்டு வந்தது அங்காடித்தெரு திரைப்படம் தான். அங்காடித்தெரு படத்திற்கு பிறகு பிளாக் பாண்டி அவர்கள் பல படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

-விளம்பரம்-

இதனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த கனா காணும் காலங்கள் சீரியலிலும் நடித்து இருந்தார். இந்நிலையில் பிளாக் பாண்டி பற்றிய அறியாத இன்னொரு முகமும் இருக்கிறது. அதாவது இவர் மற்றவர்களுக்கு பல நற்பணிகளை செய்து வருகிறார். இவர் உதவும் மனிதம் என்ற அமைப்பை உருவாக்கி கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கஷ்டப்படும் பலருக்கும் சத்தமில்லாமல் உதவி செய்துவருகிறார். இவரது அமைப்புக்கும் செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்து கை கொடுத்து வருகிறார் இயக்குனர் சமுத்திரகனி.

- Advertisement -

பிளாக் பாண்டி அளித்த பேட்டி:

இந்நிலையில் இப்படி ஒரு எண்ணம் தோன்றியது குறித்து பிளாக் பாண்டி கூறியது, கடந்த 12 வருடங்களுக்கு முன்பே இது போன்ற ஒரு அமைப்பை உருவாக்கி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் என் மனதில் தோன்றிவிட்டது. நான் நன்றாக வளர்ந்து ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு மற்றவருக்கு உதவி செய்யலாம் என்று அதைத் தள்ளிப் போட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு இயன்றதை செய்வோம் இணைந்தே செய்வோம் என்ற புதிய முயற்சியுடன் நல்ல மனிதர்களின் ஒத்துழைப்போடு கடந்த இரண்டு வருடமாக இந்த உதவும் மனிதம் மூலம் பலருக்கும் உதவி கரம் நீட்டி வருகிறோம்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-372.jpg

அமைப்பில் இணைந்த சமுத்திரக்கனி:

வாரம்தோறும் 250 பேருக்கு அன்னதானம் செய்து வருகிறோம். இதற்கு இயக்குனர் சமுத்திரகனி பக்கபலமாக இருந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார். சமுத்திரக்கனி அண்ணனுடன் கடந்த 20 வருடங்களாக எனக்கு பழக்கம் உண்டு. நான் இது போன்ற ஒரு விஷயத்தை ஆரம்பித்துள்ளேன் என்பதைக் கேள்விப்பட்டு என் நோக்கத்தைப் புரிந்துகொண்ட அவர் ஆகவே இதில் தன்னை இணைத்துக் கொண்டார். இப்போது இப்படி ஒரு அமைப்பை நடத்தி உதவி செய்து வருகிறோம் என்பதை வெளியில் சொன்னால் இது போன்று இன்னும் பல மனித நேயத்துடன் உள்ளவர்கள் உதவி செய்ய கிளம்பி வருவார்கள். மேலும், இந்த அமைப்பின் மூலம் பலருக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி, ரத்ததானம் ஆகியவற்றை செய்து வருகிறோம்.

உதவும் அமைப்பு மூலம் செய்வது:

இன்னும் குறிப்பாக ஈமக்கிரியை கூட செய்ய வசதி இல்லாதவர்களுக்கு அதற்கான பணியை நாங்கள் முன்னின்று செய்து கொடுக்கிறோம். என்னுடைய தாத்தா, டி ஆர் மகாலிங்கம் காலத்தில் அவருடன் நாடகங்களில் இணைந்து நடித்தவர். அப்போது தங்களது சக நடிகர்கள் மரணித்தால் அவரது இறுதி சடங்குகளை முன்னின்று தனது சொந்த செலவில் செய்து கொடுத்தவர் எனது தாத்தா. அதன் பிறகு எனது தந்தை, அப்படியே எனக்குள்ளும் அந்த விதை போடப்பட்டுவிட்டது. அதுமட்டுமில்லாமல் நாம் செய்யும் உதவிக்கு விளம்பரம் தேவை இல்லை என்று தான் நாங்கள் இதைப்பற்றி வெளியே எதுவும் விளம்பரம் படுத்தவில்லை.

உதவும் அமைப்பு குறித்து பாண்டி சொன்னது:

என்னுடைய சொந்த செலவில் செய்யும் உதவிகளுக்கு என் முகத்தை கூட நான் காட்ட விரும்புவதில்லை. ஆனால், பல நல்ல உள்ளங்கள் உதவும் மூலம் கிடைக்கும் பணத்தை மற்றவருக்காக செலவிடும் போது அது நிச்சயம் வெளியே தெரிய வேண்டும். அப்போது தான் இதுபோன்ற உதவும் எண்ணம் உள்ளவர்கள் இன்னும் பலர் முன்வருவார்கள். திரை உலகில் உள்ள ஒரு சிலர் உனக்கு எதற்கு இந்த வேலை எ என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ஆனால், இவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு தான் நான் இந்த செயலில் இறங்கி இருக்கிறேன். கொரோனா காலகட்டத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் நாங்கள் உதவி செய்ய துவங்கினோம். இதை பார்த்து இதுபோன்று 12 அமைப்புகள் மக்களுக்கு உதவி செய்வதற்காக களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

உதவும் அமைப்பின் நோக்கம்:

இதுகுறித்து அவர்களும் என்னிடம் பேசி இருந்தார்கள். அப்போதுதான் நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. இதன் அடுத்த கட்டமாக மாணவர்களுக்கு கல்வி வசதி நிறைந்த குடும்பங்களில் ஒருவருக்காவது அந்த குடும்பத்தின் பொருளாதாரத்தை உணர்த்தும் விதமாக வேலை வாய்ப்பு மற்றும் சுய தொழில் செய்யும் வசதி வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கின்றோம் என்று கூறியிருந்தார். இப்படி யாருக்கும் தெரியாமல் பிளாக் பாண்டி செய்துவரும் உதவி சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement