தற்போது சினிமா ரசிகர்கள் அனைவரும் புதிய படத்தை பார்ப்பதற்கு முன்பாக இணையத்தில் விமர்சனங்களை பார்த்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் டால்கிஸ் யூடுயூப் ஊடகம் ஒன்றில், எப்போதும் நீல நிற உடை அணிந்து, எதார்த்தமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் கூறுபவர் ‘ப்ளூ சட்டை மாறன்’.
நல்ல படங்கள் பற்றி கூட இவர் தவறாக விமர்சித்துள்ளார். என ஏற்கனவே சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். சமீபத்தில் பிரபு தேவா இயக்கத்தில் வெளியான சார்லி சாப்ளின் படத்திற்கு நல்ல விமர்சனத்தை சொல்ல வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் மிரட்டியதாக கூட ஒரு சர்ச்சை எழுந்தது.
இதையும் படியுங்க : இயக்குனர் மோகன் ராஜாவின் பசங்களா இது.! என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.!
அதே போல அணைத்து படங்களையும் விமர்சிக்கும் மாறன் ஒரு படத்தை எடுத்துக்காட்டட்டும் என்று பலரும் மாறனை விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் மாறன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கபோவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்று அறிவித்துள்ளார். இப்படத்தில் நடிக்க விரும்புபவர்கள் தங்களுக்கு புகைப்படங்களை மின்னஞ்சல் செய்யலாம் என்றும் மே 13 முதல் தங்களை நேரில் சந்திக்கலாம் என்றும் அறிவித்துள்ளார் மாறன்.